Sunday, November 27, 2022

சிந்திக்க வைக்கும் வரிகள்..!!

 கணவன் : உன் பெயர் என்ன.?

மனைவி : என்ன, தெரியாத மாதிரி கேட்கறீங்க?
கணவன் : பரவால சொல்லு..
மனைவி : தங்கம்.....ஏன்?
கணவன் : இனி என்னால உன்ன என் கூட வச்சுக்க முடியாது...
மனைவி : ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?
கணவன் : கவர்மென்ட் அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்காங்க.... நீ 68 கிலோ இருக்கயே..
மனைவி : ஆமாங்க நானும் உங்கள என் கூட இனி வச்சுக்க முடியாது போல
கணவன் : என்னடி ஒடம்பு எப்புடி இருக்கு.....?
மனைவி : ஆமாங்க, உங்க பெயரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க... கவர்மென்ட் தான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிருக்காங்களே, என்ன புடுச்சி குடுத்தரலாமா????
கணவன் : !!!!!!!!!!
மனைவி : யார்கிட்ட...??
மாப்பிள்ளை வீட்டார் : பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார் : பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
மாப்பிள்ளை வீட்டார் : ???
வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
(சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.)
வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.
வா‌த்‌‌தியா‌ர் : ????
பொன்மொழிகள்..!!
👍 நாம் வாழும் போது யாரை சிரிக்க வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது அழுகிறார்கள்..
👍 நாம் வாழும் போது யாரை அழுக வைக்கிறோமோ
அவர்கள் தான் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்..
👍 உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை..!!
சிந்திக்க வைக்கும் வரிகள்..!!
👌 ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து இறைவனை வேண்டினார்கள், அதில் ஒருவன் மட்டும் குடை எடுத்து வந்தான். அதற்கு பெயர் தான் Faith..
👌 குழந்தையை மேலே தூக்கி போட்டு விளையாடினார் ஒரு தந்தை ஆனால் அதற்கு பயப்படாமல் அவனைப் பார்த்து குழந்தை சிரித்தது, அதற்கு பெயர் தான் Trust..
👌 ஒவ்வொரு நாளும் அலாரம் வைத்துவிட்டு படுக்க போகிறோம் நாம் நாளை உயிரோடு இருப்போமா? என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லாமல் இருக்கிறோம் அதற்கு பெயர் தான் Hope..
👌 நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்று தெரிந்தும் எதிர்காலத் திட்டம் போடுகிறோம், அதற்கு பெயர்தான் Confidence..
👌 உலகமே கஷ்டப்படுவதை நாம் தினமும் பார்த்து வந்தும் அது போல நமக்கும் கஷ்டம் ஏற்படும் என்று அறிந்த போதிலும் நாம் திருமணம் செய்து கொள்கிறோம் அல்லவா? அதற்கு பெயர் தான் Over confidence...
May be an image of 1 person and jewellery

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...