Monday, November 28, 2022

அருமையான ஆறுதலான வார்த்தைகள்...அன்பே சிவம்

 காரணத்தை உருவாக்கி வெறுக்கும் மனிதர்களை விட, காரணமே இல்லாமல் நேசிக்கும் மனிதர்களை நேசித்து அவர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.

பிறர் மனம் மகிழ நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சரியாக வாழ்கிறீர்கள். அத்தகைய வாழ்க்கை பாதையை வாழ்வின் இறுதி வரை தவற விடாதீர்கள்.
தேவைப்படும் போது தேடுதல் அன்பாகாது. சுயநலத்திற்காக விட்டுச் செல்லுதல் அன்பாகாது. காயப்படுவார்கள் என்று தெரிந்தே காயப்படுத்துவதும் (உடலாலும், உள்ளத்தாலும்) அன்பாகாது.
ஏன் நம் மெளனம் கூட காயப் படுத்தும் எனில் அது அன்பாகாது. அன்பு சந்தோஷப் படுத்துமே தவிர சங்கடப்படுத்தாதுஅன்பு விரும்பி வருமே தவிர, விலகி நிற்காது. சேர்ந்து நிற்குமே தவிர, தனியே தவிக்க விடாது.
நமக்காக கண்ணீர் சிந்துமே தவிர, நம்மை கண்கலங்க விடாது. நமக்காக காத்திருக்கும் நம்மை காக்க விடாது.அன்பு அழகானது. ஆழமானதும் கூட. அது உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.புரிதலில் தான் அன்பும் அழகாய் மலர்கிறது.புரிதல் இருக்கும் இடத்தில் ஆணவத்திற்கு வேலையும் இல்லை. அடுத்தவர் ஆலோசனையும் தேவையில்லை.
நீயா நானா என்ற போட்டியுமில்லை. பிரிவிற்கு இடமும் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...