Saturday, April 22, 2023

இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன்..

 கர்மா பொல்லாதது..

அதை வெல்ல யாராலும் முடியாதது..
இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன்..
மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சி பெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.
காமராஜர் பதவி இழந்து, அண்ணாதுரை மறைந்த பின் நமக்கு எதிரி யாருமே இல்லை என்று இறுமாந்து இருந்த கருணாநிதிக்கு எம் ஜி ஆரை முன்னிறுத்தியது கர்மா.. அவர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சி கட்டிலுக்கு வர முடியவில்லை இதுதான் கர்மா
எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய் விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார் இதுதான் கர்மா.
ராமதாஸ்,சசிகலா , வைகோவும் 30 வருடங்களாக முதல்வர் கனவில் இருந்தாங்க.. ஆனால்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள் இதுதான் கர்மா..
எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் மூவரும் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே..
ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்..
ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார் இதுதான் கர்மா..
ஜெயலலிதா சிறைக்கு போக வேண்டுமென கருணாநிதியும்.... கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் மடங்கணும்னும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள்..
ஆனால், கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறை சென்ற போது அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.
மெத்தப் படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார்.. ஆனால், ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது..
மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமர் ஆக்கிய சோனியா, இந்தியாவே என் குடும்பத்திற்கு சொந்தம் என் மகனை எப்போது வேண்டுமானாலும் பிரதமர் ஆக்கி கொள்வேன் என்று இறுமாப்பில் இருந்த சோனியாவுக்கு மோடி வடிவில் ஆப்பு வைத்தார் கடவுள் இதுதான் கர்மா
ஜெயலலிதா அம்மையார் மறைந்து சசிகலா முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்து, எடப்பாடியார் முதல்வர் ஆனார் இது விதி என்றால்... எடப்பாடியார், சசிகலா தினகரன் என பிரிந்து, தேர்தலில் படு தோல்வி அடைந்து ஸ்டாலின் முதல்வர் ஆகி, இனி எதிரிகள் யாரும் இல்லை நிம்மதியாக ஆட்சி செய்யாலாம் என்று ஸ்டாலின் நினைக்க, அண்ணாமலை என்று ஒரு பலமான எதிரியை களமிறக்கியது கர்மா.. இது தான் கர்மா
விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்... ஆனால், பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது..
கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை...
உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத்
தவறுவதும் இல்லை..
உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.
யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்..
கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில்
நன்மையை மட்டுமே விதைப்போம்.
நல்லவர்களாக வாழ்வோம்.
கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்..
*பாவமன்னிப்பு* என்ற மதச்சடங்கு, இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?
பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.
உணர்ந்தவன் பாக்கியசாலி.... கட்டுப்பட்டவன், புத்திசாலி.. நீங்கள் பாக்கியசாலியா... புத்திசாலியா?.. உங்களுக்கான மதிப்பெண்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.....
வாழ்வில் மறப்போம் மன்னிப்போம் என்ற நல் கொள்கையை பின்பற்றுவோம் நமது வருமானத்தில் ஓர் மிக சிறிய தொகையினை நம் சமுதாய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வோம்.
தயவுசெய்து யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். கர்மா அதனுடைய வேலையை மறக்காமல் செய்யும்.
இறைவனின் ஆசீர்வாதத்தையும் விட தர்மத்தின் வாழ்த்து மிகவும் சிறப்பானது. தர்மம்-தலைகாக்கும் தக்கசமயத்தில் துணை நிற்கும். கூட இருந்தே குழி பறித்தாலும் செய்த தர்மம் தலைகாக்கும்.
தர்மமானது நம் வம்ச வழியையும் நல் வழி அழைத்துச் செல்லும்.
விதியை மதியால் வெல்லமுடியும்,
ஆனால் கர்மவினை என்பதை எந்தமதியாலும் தடுக்கமுடியாது.
May be an image of text that says 'நீ அடுத்தவனை அழிக்க நினைத்தால் உன்னை அழிக்க ஒருவன் வந்து கொண்டி ருப்பான்.. statusDP'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...