Friday, April 28, 2023

மீதி????

 ஒருவர் வீட்டிலிருந்து கிளம்பும்போது கையில் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.

முதலில் ஒரு கோயிலுக்கு செல்கிறார் அவர் கோயிலில் நுழைந்தவுடன் அவர் கையில் உள்ள பணம் தெய்வ சக்தியால் இரண்டு மடங்கு ஆகிறது. அதில் 100 ரூபாய் தானமாக வழங்கி விடுகிறார். மீதி பணத்தை எடுத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள இரண்டாவது கோயிலுக்கு செல்கிறார்
அங்கேயும் நுழைந்தவுடன் கையில் உள்ள பணம் இரண்டு மடங்காக ஆகிறது. அங்கேயும் அவர் 100 ரூபாய் தானமாக கொடுக்கிறார். மீதியை எடுத்துக் கொண்டு மூன்றாவது கோவிலுக்கு போகிறார்.
அந்த கோயிலில் நுழைந்தவுடன் மீண்டும் கையில் உள்ள பணம் இரு மடங்காக மாறுகிறது. அங்கேயும் 100 ரூபாய் தானம் போடுகிறார். மீதி பணத்தை எடுத்துக்கொண்டு,
கடைசியாக நான்காவது கோயிலுக்கு போகிறார். உள்ளே நுழைந்தவுடன் வழக்கம்போல் கையில் உள்ள பணம் தெய்வ சக்தியால் இரண்டு மடங்காக ஆகிறது. அங்கேயும் 100 ரூபாய் தானம் கொடுக்கிறார். பிறகு பார்த்தால் கையில் எதுவும் பணம் மீதம் இல்லை.
இப்பொழுது சொல்லுங்கள்,
அவர் முதலில், வீட்டிலிருந்து கிளம்பும்போது எவ்வளவு பணம் எடுத்துக்கொண்டு வந்தார்?
ஓம் நமசிவாய....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...