ஈரோடு, ராசாம்பாளையம், எஸ்.எஸ்.பி., நகரில் வசிப்பவர் சண்முகசுந்தரம். தன் விசைத்தறி கூடத்துக்கு, கூடுதல் மின் இணைப்பு கேட்டு, வீரப்பன்சத்திரம் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அலுவலக உதவி பொறியாளர் சிவக்குமார், 48; திருநகர் காலனி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகத்தை, 54, அறிமுகம் செய்துள்ளார். கூடுதல் மின் இணைப்பு வழங்க இருவருக்கும் தலா, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, November 3, 2023
லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறையில், சண்முகசுந்தரம் புகார் செய்தார். அவர்களின் அறிவுரைப்படி, திருநகர் காலனி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு, சென்றார்.சிவக்குமாருக்கு போன் செய்து வரவழைத்தார். பின் உதவி செயற்பொறியாளர் சண்முகம் அறைக்கு இருவரும் சென்றனர். ரசாயன பவுடர் தடவிய, 50 ஆயிரம் ரூபாயை சண்முகத்திடம், சண்முகசுந்தரம் கொடுத்தார். அப்போது வளாகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர். விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில், லஞ்சம் பெற்று மின் வாரிய அலுவலர் இருவர் கைதாகி யுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment