ஒரு மனிதனுக்கு தேவையான 3 விஷயங்கள் மகிழ்ச்சி, நிம்மதி, மற்றும் பண வரவு! இது இருந்தாலே வேறு எந்த விதமான பிரச்சனைகளையும் நாம் சுலபமாக எதிர்கொண்டு விடலாம். இந்த மூன்றும் மனிதனிடத்தில் கிடைப்பதற்கு பின்னணியில் ஒரு பெண் தான் இருக்கிறாள் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஒரு ஆண் நிம்மதியாக இருக்க, மகிழ்ச்சியாக இருக்க, பண வரத்துடன் உழைக்க ஏதோ ஒரு விதத்தில் ஒரு பெண் காரணமாக இருப்பாளாம். இப்படி இருக்கும் பெண்கள் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் இந்த மூன்றும் தங்கு தடை இல்லாமல் உங்களுடைய குடும்பத்திற்கு கிடைக்கும்
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, April 11, 2023
*மகிழ்ச்சி, நிம்மதி, பணவரவு இந்த மூன்றும் எப்போதுமே தடையில்லாமல் கிடைக்க 3-ஆவது வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?**
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல, ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். இருப்பினும் ஒரு குடும்பத்தை சரியாக வழி நடத்தி செல்வது ஆண்களை விட, பெண்களுக்கே அதிக தைரியம் இருக்கிறது. அப்படியான பெண்கள் குடும்ப மகிழ்ச்சிக்காகவும், நிம்மதிக்காகவும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் இறைவழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
இப்படி வெள்ளிக் கிழமையில் மட்டும் தவறாமல் விளக்கு ஏற்றி வைப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? மற்ற கிழமைகளில் விளக்கு ஏற்றி வைத்தால் என்ன? என்று கேட்கலாம். எல்லா நாளும் விளக்கு ஏற்றினால் தான் நமக்கு இறைவனின் அருள் கிடைப்பதாக சாத்திரங்கள் குறிப்பிடுகிறது. ஆனால் அதிலும் குறிப்பாக வெள்ளிக் கிழமையில் நீங்கள் விளக்கு ஏற்றி வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்றும், இதனால் இம்மூன்றும் தங்கு தடை இல்லாமல் உங்களுக்கு இருக்கும் என்பதாலும் இவ்வாறு வெள்ளிக்கிழமையில் தவறாமல் பூஜைகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
குடும்பத்தில் பெண்கள் எல்லாம் வெள்ளிக் கிழமையில் கண்டிப்பாக பெரும்பாலும் துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் வைப்பது பார்த்திருப்போம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துவரம் பருப்பு கொண்டு சாம்பார் செய்யப்படுவதற்கு பின்னணியிலும் ஒரு ரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறது. வெள்ளியில் துவரம் பருப்பு சேர்த்து சமையல் செய்தால் அந்த குடும்பத்தில் பண வரவு அதிகரிக்கும், நிம்மதி நீடிக்கும் என்கிற ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.
எல்லா வெள்ளிக் கிழமையிலும் உங்களால் சாம்பார் செய்ய முடியுமா? என்று கேட்டால் தெரியாது. எனவே கண்டிப்பாக தவறாமல் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் துவரம் பருப்பு சேர்த்து சமையல் செய்து விடுங்கள். இது மகிழ்ச்சியை, பணவரவு, நிம்மதி இந்த மூன்றையும் உங்களுக்கு நீங்கள் கேட்காமலேயே தரக்கூடிய அற்புதமான ஒரு எளிய பரிகாரமாக இருந்து வருகிறது. சாம்பார் செய்ய முடியாவிட்டாலும் துவரம் பருப்பை வேறு வகைகளில் நீங்கள் அன்றைய நாளில் சமைத்துக் கொள்ளலாம்.
சிலர் சாதத்துடன் நான்கு துவரம் பருப்புகளை சேர்த்து போட்டு சமைத்து விடுவார்கள். அந்த அளவிற்கு உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கக் கூடிய இந்த துவரம் பருப்பு சாம்பார் பரிகாரம் தெரியலைன்னா இனிமே தெரிஞ்சுக்கோங்க! மூன்றாவது வெள்ளிக் கிழமையில் துவரம் பருப்பை யாருக்கும் தானம் கொடுக்கக் கூடாது. அது போல மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்களுக்கும் தனிப்பட்ட பலன்கள் உண்டு. எனவே மூன்று என்கிற எண்ணிக்கை அதிர்ஷ்டமாகவே எல்லா இடங்களிலும் கருதப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment