Sunday, October 23, 2016

அதிமுக தொடங்கப்பட்ட பிறகு 1977 க்கு பிறகு நடந்த 10 சட்டசபை தேர்தல்களில் இரண்டு தேர்தல்களில் மட்டுமே 100 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது திமுக.
1977 - 48 திமுக எம்.எல்.ஏக்கள்
1980 - 37 திமுக எம்.எல்.ஏக்கள்
1984 - 24 திமுக எம்.எல்.ஏக்கள்
(MGR அவர்கள் அமெரிக்காவில் இறந்துபோய்விட்டதாக திமுக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்த தேர்தல் இது)
1989 - 150 திமுக எம்.எல்.ஏக்கள்
இரட்டை இலை சின்னம் இல்லாத தேர்தல் இது.
( அதிமுக கட்சி இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 எம்.எல்.ஏக்களுடன் பிரதான எதிர்கட்சி தலைவரானார் செல்வி.ஜெயலலிதா.
அதிமுக ஜானகி பிரிவில் இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்ட பி.ஹெச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார்)
1991 - 1 திமுக எம்.எல்.ஏ
( திமுக சார்பில் துறைமுகம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற கருணாநிதி சட்டசபைக்கு போக பயந்து தன் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பரிதி இளம்வழிதி மட்டுமே அப்போது திமுகவின் ஒரே சட்டமன்ற உறுப்பினர்.
1996 - 173 திமுக எம்.எல்.ஏக்கள்
2001 - 31 திமுக எம்.எல்.ஏக்கள்
2006 - 91 திமுக எம்.எல்.ஏக்கள்
2011 - 21 திமுக எம்.எல்.ஏக்கள்
( பிரதான எதிர்கட்சி என்ற அந்தத்தைக்கூட விஜயகாந்திடம் பறிகொடுத்தது திமுக)
2016 - 89 திமுக எம்.எல்.ஏக்கள்
அதிமுக தொடங்கப்பட்ட பிறகு 1977 க்கு பிறகு நடந்த 10 சட்டசபை தேர்தல்களில் இரண்டு தேர்தல்களில் மட்டுமே 100 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது திமுக.
அதில் ஒரு வெற்றி பெரும்போது இரட்டை இலை சின்னமே களத்தில் இல்லை ( 1989)
இன்னொரு முறை வெற்றி பெறும்போது அதிமுக மீதான எதிர்ப்பு அலை தீவிரமாக இருந்தது (1996)
தற்போது அதிமுக தனித்து நின்று தன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட நிலையில் காங்கிரஸ் கட்சி துணையோடு 89 உறுப்பினர்களை பெற்ற திமுக இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஆட்சியை பிடிப்போம் என பிதற்றுகிறது.
வரலாற்றை திரும்பி பார்த்தால் திமுகவின் யோக்கியதை நன்றாக தெரியும்.
கடந்த பத்து சட்ட மன்ற தேர்தல்களில் குறைந்தது நான்கு தேர்தல்களில்கூட 100 சீட்டுகளுக்குமேல் வெற்றி பெற முடியலை. இந்த லட்சனத்தில் கருணாநிதியின் மகனும் அறிவாலய மடத்தின் அடுத்த தலைவருமான ஸ்டாலினுக்கு பகல்கனவுவேற.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...