Friday, October 14, 2016

"பொறுமை கடலினும் பெரிது"

ஒரு மருத்துவமனையில் பணியாளர்களுக்கான தேர்வு நடந்தது. கலந்துகொண்ட எல்லாருக்கும் வினாத்தாள் வழங்கி தேர்வுக்கான நேரம் பத்து நிமிடம் என அறிவிக்கப் பட்டது.
பலர் பத்து நிமிடத்தில் எப்படி எழுதுவது என்று புலம்பி வெளியேறினர். சிலர் பாதி கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுத முடிந்தது என்று முணுமுணுத்தனர். நால்வர் மட்டும் பத்து நிமிஷம் கழித்து எழுதாத வெறும் தாளை கொடுத்தனர்.
அரை மணி நேரம் கழித்து முடிவு அறிவிக்கப் பட்டது. முடிவு அறிவிக்கும் போது ஐந்து பேர் மட்டும் இருந்தனர். வெறும் தாளை கொடுத்த நால்வரும் தேர்வானார்கள்
காரணம்:- அது பொறுமையை சோதிக்கும் தேர்வு. அந்த வினாத்தாளின் கடைசியில் கேள்விகளை பொறுமையாக படித்தால் போதும் என்று இருந்தது. முடிவை தெரிந்துக் கொள்ள காத்திருந்த பொறுமை வினாத்தாள் படிப்பதில் இல்லையே என ஐந்தாவது நபர் வருந்தினார். மற்றவருக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தை தெரிந்துக் கொள்ள கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
"பொறுமை கடலினும் பெரிது"
"பொறுத்தார் பூமி ஆள்வார்"
ஆனா .................................
நாம பொறுமையா இருந்தா மட்டும் "இது பொறுமையில் எருமை" என்று முடிவு செய்து விடுகிறார்கள். நம்ம டிசைன் அப்படி. 
:D

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...