Monday, October 31, 2016

வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? – உன்னுள் நீ . . .


வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? – உன்னுள் நீ . . .

வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? – உன்னுள் நீ . . .
வாழ்வில் வெற்றி பெற தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் !!
ஒருவன், தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டு, கடவுளை வேண்டி
தவமிருந்தபின் அவன்முன் கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம், “என்னை ஏன் இப்படி படைத்தீர்? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன?” என கேட்டான். கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து, “இதன்மதிப்பை அறிந்துவா?” ஆனால் விற்கக்கூடாது என்றார்.
அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு,அக்கல்லுக்குபதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.
அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூட்டை கிழங்கு தருவதாக சொன்னான்.
நகைக்கடையில் காண்பித்ததற்கு 50,000 பொற் காசுகள் தருவதாக சொல் லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.
மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன்மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு, “இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை” என்று கூறினார்.
குழப்பமடைந்த நம் நண்பன், கடவுளை பார்த்து நடந்த தை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், “பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர்தான் சொன்னார். அதேபோல் உன்னை ஒவ்வொரு வரும் ஒவ்வொருமாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெ ல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.
கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!
தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!
உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!*
இதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...