Wednesday, October 19, 2016

“சுக்கு” – அரிய‌ மருத்துவக் குணங்கள் – பயனுள்ள தகவல்

சுக்கு-அரிய‌ மருத்துவக் குணங்கள் – பயனுள்ள தகவல்
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில்
பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச் சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4.சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலை யை மென்றுதின்றால், வாயுத் தொல் லை நீங்கும்.
5.சுக்கு, வேப்பம்பட்டைபோட்டு கஷா யம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலை வலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு( Pepper ) சேர்த்து, “சுக்குநீர்” காய் ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்ப டும்.
8.சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர்தெளித்து, மைய் யாக அரைத்துண்டால், அதிக மது அருந்திய போதை  தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9.சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப்பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10.சுக்கு, மிளகு, சீரகம் (Cumin ), பூண்டு(Garlic)சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்து வர மாந்தம் குணமாகும்.
11.சுக்குடன், சிறிது துளசி இலை யை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசி வர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்துஅரைத்துச்சாப்பிட்டால், மலக் குடலில் உள்ள தீமை தரும் கிரு மிகள் அழியும்.
14.சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூல நோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றி லை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பி ட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப் பொடி இட்டு சாப்பிட்டால், வயிற் றுப்புண் ஆறும்.
18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண் டு, வேப்பிலை இவை களைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்து வர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண் ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்து க் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல் வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர் நாற்றம் விலகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...