Thursday, October 20, 2016

மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழு வதும் அகன்றுவிடுவதில்லை.

ஒருவர் மரணமடைந்தவுடன்,அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்கு களை எதற்காகச் செய்கிறார்கள்?
இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன் பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என் னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்ல ப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண் டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள்.ஏனெனில், ஒரு கட்டடத்து க்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப் படும்போ து காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரி யும்.
மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழு வதும் அகன்றுவிடுவதில்லை. என வே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச்சுற்றிக்கொண்டு இரு ப்பது பயன் தராது என்று அந்த உயிரு க்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நி லைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக் கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்ப டுத்தும். இது இறந்து போன மனி தருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களு க்கும் நல்லதல்ல.
இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விர ல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிற போது கால்கள் அகலமாகத் திறந்து கொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக் கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.
எனவே, கால் கட்டை விரல்க ளைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூட ப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற் காக நீங்கள் கால்கட்டை விரல் களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாக வே மூடிக்கொள்ளும்.இதையேதான் இற ந்தவர்களுக்கும்செய்கி றார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
மூலாதாரம் திறந்திருக்கிற போது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக் கூடும். மாந் திரீகப் பயிற்சி மேற் கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்த க்கூடும். அப்படி அந்த உடல் வேறு வித த்தில் பயன் படுததப் பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன் புறுத்துவதாக இருக்கும். அதனால் தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...