Monday, October 31, 2016

நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.



முருகனருள் பெற்றதால் சிவபெருமான், அகத்தியர், அருணகிரிநாதர் மூவரும் முறையே தேவதேவர், முனி சிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று போற்றப்படுகின்றனர்.
12 ஆண்டுகள் முருகனை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.
முருகனின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர் முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய் தருளினான்.
பழநி முருகன் சிவகிரி மேல் வீற்றிருப்பதைக்கண்டு வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின் முருகனின் மகிமை உணர்ந்து அவ ருக்கே காவல் தெய்வமாக அதே பழநியில் திகழ்கிறான்.
பழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து, ‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக் கேட்டு ஔவையாரை திகைக்க வைத்து ஆட்கொண்டான் முருகன்.
தனக்கு ஏற்பட்ட காச நோயை ஆதிசங்கரர் திருச்செந்தூர் செந்திலாண்டவனை சுப்ரமண்யபுஜங்கம் பாடித் துதித்து நீக்கிக் கொண்டார்.
திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் அருணகிரிக்காக முருகன் கம்பத்தில் தோன்றியருளினார். அவரே கம்பத்திளையனார் என்று போற்றப்படுகிறார்.
வள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில் திருத்தணிகை முருகன் தரிசனமளித்து ஆட்கொண்டார்.
திருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு கற்கண்டை வாயில் போட்டு ‘ஸ்ரீநாதாதி குருகுஹோ’ எனும் கீர்த் தனையைப் பாட வைத்தார்.
ஊமையாக பிறந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகன் அருளால் உலகமே புகழும் வண்ணம் கவி பாடும் திறமை பெற்றார்.
மதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப்பெருமானைப் பாடாத தம் நாவும் ஒரு நாவா?’ என நினைத்து தன் நாக்கை அறுத்தெறிந்தார். பின் முருகன் அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை பாடுவதில் வல்லவரானார்.
மதுரை மீனாட்சியின் அருளாணைப்படி சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் முருகனை பனைமரத்தில் சுயம்புவாக பிரதிஷ்டை செய்து முருகனருள் பெற்றார்.
திருப்புகழை உலகில் பரப்பவே பிறப்பெடுத்தவர் வள்ளிமலை சுவாமிகள். முருகனின் திருவருளால் பொங்கி எனும் பெயரில் வள்ளிநாயகியை வழிபட்டு வள்ளியை நேரில் தரிசித்த பெருமையும் பெற்றவர்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகனின் திருவருளை பரிபூரணமாகப் பெற்றவர். பற்பல துதிகளை முருகன் மேல் இயற்றியவர்.
பெங்களூரு அல்சூர் பகுதியில் ஏரிக்கரை ஓரம் உள்ள முருகன் ஆலயத்தில் ஒடுக்கத்தூர் சுவாமிகள் எனும் மகானின் சமாதி உள்ளது. ஒடுக்கத்தூர் சுவாமிகள் இத்தல முருகனின் பேரருளைப் பெற்றவர்.
முருகனின் திருவருளைப் பெற்று வாழ்ந்த மகான் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். வயலூர் கந்தவேளை எந்த வேளையும் போற்றிப் புகழ்ந்த புண்யமூர்த்தி இவர்.
தன் கால் எலும்புகள் முறிந்த நிலையில் மருத்துவர்கள் கை விட்டு விட, முருகனை பிரார்த்தித்து ஷண்முக கவசம் பாடினார், பாம்பன் சுவாமிகள். அப்போது இரு மயில்கள் பறந்து வந்து தம் தோகைகளால் அவர் கால்களை தடவ, அவர் எழுந்து நடந்ததை மருத்துவ உலகமே வியப்புடன் பார்த்தது.
பழநி முருகனின் பேரருளைப் பெற்று, பல சித்திகள் பெற்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வு தந்தவர் பன்றிமலை சுவாமிகள்.
முருகப்பெருமான் தன்னை எதிர்த்த சூரபத்மனை சேவலாகவும் மயிலாகவும் ஆக்கி தன் கொடிகளாக்கிய கருணை வள்ளல். எனவே சூரபத்மனும் முருகனருள் பெற்றவனே.
கந்த புராணத்தை எழுத கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு முதல் அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமானை காஞ்சி கந்தகோட்டத்தில் தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...