
புனே நகரில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியும் நடைமுறைக்கு எதிராக பலர் கருத்துக்கூறி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாதவர்களை நடுரோட்டில் தடுத்து நிறுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.
சட்ட விதிகளை மீறுவோரை சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் கண்டறிந்து, அவர்களது வீட்டிற்கு செல்லான்களை அனுப்ப போக்குவரத்து காவல் துறையினருக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் நடுரோட்டில் நிறுத்தப்படக் கூடாது என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

நகரம் முழுக்க போக்குவரத்து காவல் துறையினர் நிறுவி இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோரை மிக எளிமையாக கண்டறிந்து விட முடியும். பின் புகைப்படங்களை கொண்டு இ-செல்லான் உருவாக்கி, அவரவர் வீடுகளுக்கு அனுப்ப முடியும்.
வீட்டிற்கு வரும் செல்லாண்களுக்கு, விதிகளை மீறியவர்கள் ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்த முடியும். எனினும், தொடர்ந்து விதிகளை மீறுவோர் மீது மிகப்பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
No comments:
Post a Comment