அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே தலைமை பதவியை பிடிக்கும் போட்டியில் மோதல் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. அதுமட்டுமின்றி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று கட்சியை வழி நடத்தி வருகிறார். அ.தி.மு.க. தலைமைக் கழகம் மற்றும் இரட்டை இலை சின்னம், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளதால் அவரது செல்வாக்கு கட்சியில் ஓங்கி விட்டது. இந்த நிலையில் ஜூலை 11-ந்தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட தீர்மானங்களை அ.தி.மு.க. வின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி சார்பில் வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதன் மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. இப்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து விட்டனர். இந்த சூழலில் கர்நாடக மாநில தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற சிக்கல் உருவாகி உள்ளது. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரும் மனு மீது தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி குரு சந்திரா விசாரித்தார். அப்போது இந்த பிரச்சினையில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தரப்பில் 10 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், பொதுச்செயலாளர் பதவி தொடர்பான மூல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று வாதிட்டனர். முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இதுகுறித்து ஆலோசனை நடத்தலாம் என்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பெங்களூரு புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் இன்று இறுதி முடிவெடுக்க உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இதற்கான ஆலோசனை இன்று நடைபெறுகிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment