Wednesday, June 15, 2011

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி.

இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களை நிரூபிக்கும் வகையில் புதிய காணொளி ஒன்றை வெளியிடுகின்றது பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி.
இக்காணொளி நாளை இத்தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட உள்ளது.

புதிய காணொளியில் காட்டப்பட இருக்கின்ற காட்சிகள் இத்தொலைக்காட்சி சேவையால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வீடியோக்களில் இடம்பெற்று இருந்த காட்சிகளை காட்டிலும் அதிபயங்கரமானையாக இருக்கும் என்று சனல் 4 தொலைக்காட்சியின் செய்திச் சேவை ஆசிரியர் டொறத்தி பேர்ன் தெரிவித்து உள்ளார்.

இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற ஆதாரமாக கொலைக்களம் என்கிற வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அடங்கலாக உலக மட்டத்தில் இவ்வீடியோ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வீடியோவில் காட்டப்பட்ட காட்சிகள் உண்மையானவை என்று ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இவ்வீடியோவில் காட்டப்பட்ட காட்சிகள் போலியானவை என்று நிராகரித்து உள்ளது இலங்கை அரசு.


சனல் 4 தொலைக்காட்சி ''இலங்கையின் படுகொலைக் களம்'' என்னும் தலைப்பில் ஓர் ஆவணத் திரைப்படத்தை நேற்று இலண்டன் நேரம் இரவு 11.05 மணிக்கு ஒளிபரப்பியது.


இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போதான போர்க்குற்ற ஆவணங்களின் தொகுப்பான ''இலங்கையில் படுகொலைக்களம்'' எனும் இவ்வாவணப் திரைப் படத்தினை சனல் 4 வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...