Saturday, June 18, 2011

கலைஞருக்கு அதிரடியான ஐந்து கேள்விகள்!

கலைஞர் அய்யா..இது சாதரண பாமர மனிதன் உங்களுக்கு ஓட்டு போட்ட உரிமையில் கேட்கும் கேள்விகள்..உடனே நீ அந்தம்மா..ஆதரவாளனா.? வங்காளத்திலே துப்பாக்கி பிடிக்கும் கம்யூனிஸ்டா..என கேட்டு எஸ்கேப் ஆகிவிடாதீர்கள்!...


1.ஸ்பெக்ட்ரம் பற்றி இதுவரை தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்துமே ,நச்சென்று இல்லை...இதற்கு முன் இருந்த மந்திரிகள் நடந்து கொண்டதை பின்பற்றியே ராசாவும் நடந்து கொண்டார் என்கிறீர்கள்...அதை பற்றி இன்னும் புரியும்படியாக விளக்க முடியுமா...அதாவது ஏன்..ஸ்பெக்ட்ரம் பற்றி இவ்வளவு காட்டமாக எல்லோரும் விமர்சனம் செய்கிறார்கள்..அவர் தலித் என்பதை தவிர,வேறு உருப்படியான காரணங்கள் உங்களிடம் இருக்கிறதா?

2.ராசாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மந்திரி பதவி கொடுக்கப்பட்டது எதற்காக?அவர் தலித் என்பதை தவிர?எல்லா தலித்களுக்கும் இது போல..சான்ஸ் உண்டா..இல்லையா...ராசா ராஜினாமா செய்யப்பட்டதும் ஏன் தலித் சமூகம் பொங்கி எழவில்லை...?

3.நீரா ராடியா கேள்வி பட்டுள்ளீர்களா..அவருக்கும் காங்கிரஸ்,தி.மு.க வுக்கும் என்ன சம்பந்தம்...அவரும் உங்கள் கண்மணிகளும் உரையாடியதை கேட்டீர்களா..அதில் சொற்குற்றம்,பொருட்குற்றம் ஏதாவது கண்டீர்களா?

4.நீரா ராடியா உரையாடல் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளோம்..வழக்கம் போல அந்தம்மா இதை கையில் எடுத்தால்தான் அறிக்கை வெளியிடுவீர்களா....இது போலி என்று நீங்கள்..சொல்லவும் முடியாது நிரூபித்து விடுவார்கள்...இந்த இக்கட்டை எப்படி சமாளிக்க போகிறீர்கள்?

5.ஸ்டாலின்,அழகிரி,கனிமொழி,தயாநிதிமாறன், இவர்கள் நான்கு பேருக்கும் தலா இத்தனை என எதிர்காலத்தில் கட்சியை எப்படி பிரித்து தரப்போகிறீர்கள்?

ஒரு துணை கேள்வி.....இப்பொழுது பதிவுலகை பாடாய் படுத்தும் லிவிங்க் டூ கெதர் பற்றி உங்கள் கருத்து என்ன? ஹிஹி..நம்ம பயபுள்ளைகளுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்னுதான்!!


 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...