Thursday, June 30, 2011

புது தலைமைச் செயலகம் குறித்து விசாரணையா? யாரும் புகார் தரவில்லை என்கிறார் கருணாநிதி

:புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து விசாரிக்க, தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளதை கடுமையாக விமர்சித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

 
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்த புகார்களை விசாரிக்க, நீதிபதி தங்கராஜ் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷனை, தமிழக அரசு அமைத்துள்ளது. தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து, யாரும் புகார் கொடுத்ததாக, எந்த செய்தியும் வரவில்லை.விசாரணை வரையறைகளாக, கட்டுமானத் தரத்தில் குறைகள், கட்டுமானப் பணியை முடிக்க காலதாமதம், முறைகேடுகள், தேவையில்லாத செலவினங்கள் என கூறப்பட்டுள்ளது. டில்லியில் பிரதமரை சந்திக்கச் சென்ற போது, முதல்வர் தங்கும் அறை மாற்றப்பட்டது. புதிதாக சாலை போடப்பட்டது. இதற்கு செலவழிக்கப்பட்டது எவ்வளவு, செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு சட்டப்பேரவை உருவாக்க செய்த செலவு எவ்வளவு, பயணிகள் விமானத்தை பயன்படுத்தாமல், தனியார் விமானத்தில் முதல்வர் செல்வதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு, இது குறித்து விசாரணை உண்டா?விசாரணை கமிஷன் தலைவர் தங்கராஜ் ஐகோர்ட் நீதிபதியாக இருந்த போது அளித்த தீர்ப்பு, பலத்த சர்ச்சையை கிளப்பியது.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...