Monday, June 20, 2011

இந்தியாவின் தைரியமான முதல்வர் என்று சொல்லலாமா?

 

ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதுமட்டுமா ஈழத்தமிழர்கள் கொல்லப்பட ஆயுதம் கொடுத்து உதவியது இந்திய அரசுதான் என்பதை தைரியமாக சட்டசபையில் பதிவு செய்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தைரியமும் துணிச்சலும் உள்ள ஒருவரால்தான் இதை கூற முடியும். இப்பொழுதுதான் ஜெயித்து ஆட்சி அமைத்துள்ளார், பொதுவாக மத்திய அரசை பகைத்து கொள்ள மாநில அரசுகள் அஞ்சும் அப்படி இருக்க ஜெ இந்த கருத்தை பதிவு செய்ய நிச்சயம் தைரியம் வேண்டும்.

ஒரு விசயத்தை செய்யனும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை செய்தே தீருவார். அதில் ஜெ.யின் தைரியம் யாருக்கும் வராது’’ என்றே சொல்லவேண்டும்.

இந்தியாவின் தைரியமான பெண் முதல்வர் என்று ஜெ.வை சொல்லலாம். ஈழத்தமிழர்களின் வீரம் ஜெயிடம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டது என்று சொல்லாம்.

திமுக எங்களுக்கு சுமையே! காங்கிரஸ்!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புது தில்லி விஜயமும், பிரதமருடனான அவரது சுமுகமான சந்திப்பும் காங்கிரஸ் - அதிமுக உறவுக்கான தொடக்கமாக இருக்கக் கூடுமோ என்கிற யூகத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

கடந்த ஆட்சியின் விளைவாகத் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் சுமையைக் குறைக்கக் குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு உதவியாக வழங்க வேண்டும் என்றும், இது தவிர மாநில அரசு செயல்படுத்த இருக்கும் உதவித் திட்டங்களுக்கும் தேவையான நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கடந்த திமுக ஆட்சியில் மிக மோசமான நிதி நிர்வாகம் நடந்தேறிய நிலையில் அதை மத்திய அரசின் உதவியில்லாமல் புதிய அதிமுக அரசால் சரிசெய்ய முடியாத இக்கட்டில் சிக்கியிருக்கிறது அதிமுக அரசு. ஒவ்வொரு முறை அதிமுக ஆட்சி அமையும்போதும், முந்தைய திமுக அரசினால் சீர்குலைக்கப்பட்ட நிதிநிலைமையைச் சரிசெய்வதற்கே குறைந்தது மூன்று ஆண்டுகளும், அதற்காகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதால் ஏற்படும் கெட்ட பெயரும்தான் மிச்சமாகிறது என்பது உண்மையே.

இந்த நிலையில், 2001 ஆட்சியின்போது ஏற்பட்டது போல மத்திய அரசிடம் இணக்கமில்லாத சூழ்நிலை தொடர்வதை முதல்வர் ஜெயலலிதா விரும்பமாட்டார் என்பதால்தான், திமுக - காங்கிரஸ் உறவு தொடருமா என்கிற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாதைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் திமுகவுடனான தொடர்பை முறித்துக் கொள்ளும் எந்தவித எண்ணமும் காங்கிரசுக்கு கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் தரப்பிலும் அதிமுக உறவு பற்றிய சிந்தனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிறகு ஏன் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸýடனான உறவு முறிந்துவிடும் என்று பயப்படுகிறார்?""கருணாநிதி காங்கிரஸ் உறவு முறிந்துவிடும் என்று பயப்படவில்லை, விரும்புகிறார்'' என்கிறார் இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன்.

இது படுமோசமான தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருக்கும் திமுகவுக்குப் புத்துயிர் கொடுக்கக் கருணாநிதி செய்யும் முயற்சிதான் என்பது அவரது கருத்து.""திமுக பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்துகூட இல்லாத நிலைமைக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலைமை. வருகிற நகராட்சி, உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக படுதோல்வி அடைந்துவிட்டால், கட்சி அமைப்புகள் நிலைகுலைந்துபோய், கருணாநிதிக்குப் பிறகு அந்தக் கட்சி சின்னாபின்னமாகிச் சிதறு தேங்காயாக உடைந்துவிடும்.

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ்சை வெளியேற்றி அதிமுகவுடன் கைகோக்கச் செய்வதன் மூலம், அதிமுகவின் தோழமைக் கட்சிகளான தேமுதிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளை மூன்றாவது அணி அமைக்க வைப்பதுதான், கருணாநிதியின் கனவு. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி பலவீனமாகி விடுமென்றும், திமுக அணியில் முடிந்தால் இடதுசாரிகளையும் இணைத்து பலப்படுத்திக் குறைந்தது பாதிக்கு மேலான நகராட்சி, உள்ளாட்சிகளைக் கைப்பற்றுவது என்பதும்தான் கருணாநிதி போடும் கணக்கு.

அதிமுக - காங்கிரஸ் கூட்டணியும் வராது, தேமுதிக - காங்கிரஸ் மூன்றாவது அணியும் சாத்தியம் இல்லை'' என்று தெளிவுபடுத்தினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்துக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்வதுதான் அரசியல் சாதுர்யம் என்பதை முதல்வர் ஜெயலலிதா உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படுமானால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒருவர் பின் ஒருவராகக் கருணாநிதியின் குடும்பத்தினர் சிக்குவதற்கு அதிமுகவின் மறைமுக நெருக்கடிதான் காரணம் என்று அதை திசை திருப்பிக் கருணாநிதி அனுதாபம் தேடப் பார்ப்பார்

உண்மையைச் சொல்லப் போனால், திமுகதான் எங்களுக்கு சுமையே தவிர, நாங்கள் திமுகவுக்கு சுமையல்ல. ஏதோ எங்கள் கூட்டணி தொடர்வதால்தான் திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக பவனி வருகிறார்கள் என்பதைக் கருணாநிதி மறந்துவிடக்கூடாது. இந்தக் கூட்டணி இல்லாவிட்டாலும் மத்திய அரசுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை.

திமுகவுக்கு, குறிப்பாக, கருணாநிதி குடும்பத்தினருக்குத்தான் பாதுகாப்பு இருக்காது'' என்று கருத்துத் தெரிவித்த முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதுதான் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்று தலைமைக்குத் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

அதிமுகவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் பொறுத்தவரை, திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்வதுதான் நல்லது என்று கருதுவதாகத் தெரிகிறது. இல்லையென்றால், நியாயமான தவறுகளுக்காகக் கருணாநிதி குடும்பத்தினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அதிமுகவின் மீது பழி சுமத்தக் கருணாநிதி தயங்கமாட்டார் என்பது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும்.

மத்திய அரசுடன் சுமுகமான உறவு, அதேசமயம் காங்கிரஸ் கட்சியுடன் ""சற்று தள்ளியே இரும் பிள்ளாய்...'' தொடர்பு என்று முதல்வர் ஜெயலலிதா வியூகம் வகுத்திருப்பதாகத் தெரிகிறது.திமுக கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதாக இல்லை.

காங்கிரஸ் என்னதான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாராமுகமாக இருந்தாலும், தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பாக மத்திய அமைச்சர் பதவி இருப்பதால், திமுகவும் வலிய விலகிக் கொள்வதாக இல்லை. "விக்கிரமாதித்தன் கழுத்தில் ஏறிய வேதாளம்' கதையாக அந்த உறவு தொடர்வதுதான் தனக்கு சௌகரியம் என்பதால் அதிமுகவும் அலட்டிக் கொள்வதாக இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...