Wednesday, June 15, 2011

ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசு பதிலளிக்க வேண்டும்!

 
 

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலாளர் டக்ளஸ் அலென்சாண்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாகவும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் நவனீதம்பிள்ளை உரையாற்றியது தொடர்பாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறுதிக்கட்டப் போரில் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதத்திற்கிடையிலான காலப்பகுதியில் அரசாங்க படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என நிபுணர்குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனிதஉரிமை மீறலாக அமைந்துள்ளதுடன் போர்க்குற்றத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும். அதேவேளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் சொந்த விசாரணைக்குழுவான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது நம்பகத்தன்மை குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள இந்த வருடம் நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும்.

இந்த அறிக்கை ஐ.நா நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.

உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கிடைக்க வழி செய்து, போர்க்குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப முடியும் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...