Saturday, June 25, 2011

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணம் 9% அதிகரிப்பு

டீசல் விலை அதிகரிப்பை தொடர்ந்து சரக்கு கட்டணத்தை 8 முதல் 9% வரை உயர்த்துவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

டீசல் விலையை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து வழித்தடங்களிலும் சரக்கு கட்டணம் 8 முதல் 9% வரை உயர்த்தப்படுவதாகவும், இது உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வருவதாகவும் அகில இந்திய சாலை போக்குவரத்து மோட்டார் சங்கத் தலைவர் சரண் சிங் இன்று சண்டிகரில் தெரிவித்தார்.

சரக்கு கட்டணத்தின் மீதான இந்த விலை உயர்வு காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பண்டகங்கள் மற்றும் தொழிற் பொருட்கள் அடங்கிய அனைத்து வகையான பொருட்களுக்கும் அமலாவதாக அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...