Tuesday, June 28, 2011

கண்களில் ஏன் இந்த கண்ணீர் அது யாராலே..? – கருணாநிதி

தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். 


குல்குஸ்மா :

பழம் அதிகமா பழுத்தால் அழுகிவிடும் .. அதிலும் நீங்கள் பழுத்த பழம் அல்லவா ஊழலில் அதுனால் அழுது விட்டீர்களோ என்னவோ....


காவிரி ஆறே கஞ்சியா ஆனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கனும். அதிமாதிரி தான் யாராகா இருந்தாலும் தன் மகள் சிறையில் இருப்பதை பார்க்கும் பொழுது கண்களில் ஏற்படும் கண்ணீர் இயற்கையானதே.. இதை ஒரு செய்தியாக போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்.  தன் மகள் சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கைகளுக்கு “கனிமொழிக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். சரத்குமார், சிறையில் பலவீனமாக காணப்பட்டார். கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர் “ என்று ஒரு பேட்டி கொடுத்தீர்களே இப்பொழுது தான் உங்களுக்கு இது மனிதாபிமானமற்ற செயலாக தெரிகிறதா..?? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் என் சமுதாய சகோதரர்களை விசாரணை கைதிகளாகவே பல வருடம் வைத்தீர்களே அப்பாழுது அவர்கள் குடும்பம் வடித்த கண்ணீரை பார்க்கும் பொழுது உங்களுக்கு மனிதாபிமானமற்ற செயலாக தெரியவில்லையா..?. இலங்கையில் நம் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிப்பதை கண்டும் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்துவிட்டு பிறகு உண்ணாவிரதம் இருப்பதாக போலி நாடகம் ஒன்று நடத்தினீர்களே அப்பொழுது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம்

கடைசியா ஒன்னு சொல்றேன் “ என்னதான் பத்து LIFE BOY  சோப்பு குளிச்சாலும் காக்கை வெள்ளை ஆவாது அது மாதிரி தான் இனி நீங்க என்னதான் அழுது புரண்டாலும் இனி இந்த ஊர் உங்கள நம்பாது “.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...