Saturday, October 8, 2016

டென்ஷன் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க ஆசையா?

இன்றைய சுறு சுறுப்பான, வேலை பளுமிக்க, நம் வாழ்க்கை முறையில், மனஅழுத்தம் என்பது தவிர்க்க இயலாத ஒரு அங்கமாக மாறித்தான் போய்விட்டது.
நமக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
நாம் செய்யும் செயல்களை நமக்கு பிடித்த விதமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும்.
அதற்கு நாம் சில செயல்களை செய்ய வேண்டும்.
அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொருட்டு கிழே கண்டுள்ளவைகளை பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.
புத்தகம் படிப்பது:
புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும்
ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியோடு இருக்கும்.
யோகாசனம்:
தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும்.
இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும்.
யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் பொழுது மனமானது சாந்தமாகி பின்னர் அமைதி அடையும்.
இசையைக் கேட்பது:
கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது.
நல்ல இசையை கேட்டு மகிழ்வதே. இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும்.
எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.
தோட்டக்கலை:
தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும்.
திறந்த வெளிக்குச் சென்று செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றடாம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும்.
மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும்..
சமைப்பது:
சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொணடிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம், என்பதிலும் தான் இருக்கும்.
மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.
எழுதுவது:
மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி எழுதுவது. அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம், அல்லது சிறு கதைகளாகவும் இருக்கலாம்.
எது எப்படியோ, அது மனதில் உள்ளவையை காகிதம் அல்லது கணினி மூலம் ஒரு படிவம் தருவதாக இருக்கும்.
இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும்..
மற்றவர்களிடத்தில்,
மன்னியுங்கள், நன்றி, வணக்கம், வாங்க,நலமா போன்ற சொற்களையும் அடிக்கடி தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள்.
அவை உங்களை பண்புள்ளவராகக் காட்டும்.
என்ன இதெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்றால்..
உங்களுக்கு இனிமே நோ டென்ஷன்! வாழ்க்கையை இனிமையாகவும்,ஆனந்தமாக கொண்டு செல்லலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...