Friday, October 7, 2016

புகழ் நிறைந்த வாழ்வு,

நம் வாழ்க்கையில் நமக்குக் கொஞ்சமாவது புகழ் இருக்கவேண்டும்.
நம்மை நான்கு பேர்களுக்குக் கூடத் தெரியாதென்றால் அது வாழ்வா?
எனவே, புகழ் பெற நாம் கொஞ்சமாவது பாடுபடத்தான் வேண்டும்.
வெற்றிச் சிகரத்தைப் பிடித்தவர்களின் குறிக்கோள் என்ன?
புகழ் நிறைந்த புதுமை வாழ்வு!
பொன்னணியிலும் மிகப் பெரியது
இந்தப் புகழ்,
இன்று வாழ்கிறவர்களுக்கு.
புகழ் என்பது வெற்றி அணி.
புகழில்லாவிடில் இன்றைய வாழ்வு இனிக்காது.
புகழ் இல்லாவிட்டால் இந்தப் பொல்லாத வாழ்வு புளிக்கும்!
புகழ் நிறைந்த வாழ்வு,
அகல் விளக்கு ஏற்றிய ஆண்டவன் திருக்கோயில்.
புகழ் நிறைந்த வாழ்வு,
வளர்ந்த செந்தாமரைத் திருக்குளம்.
புகழ் நிறைந்த வாழ்வு,
யாரும் புலவர்கள் நிறைந்த அத்தாணி மண்டபம்.
புகழ் நிறைந்த வாழ்வு,
அமைதியைத் தரும்,
ஆறுதலை அளிக்கும்,
இனிமையைப் பரப்பும்,
ஈசனைக் காட்டும்,
உறுதியை ஊட்டும்,
ஊனை உருக்கும்,
எண்ணத்தை ஏற்றமுறச் செய்யும்,
ஏக்கத்தைப் போக்கும்,
ஒளி காட்டும் விளக்கை மின்னும்,
ஓவியமாய்த் திகழும்.
வெற்றி பெற்ற புலவன் சிந்தையிலே குடிக்கொள்ளும் புகழ்.
அதன் பலன் __கவிதை.
வெற்றிக் கலைஞர் கருத்திலே தெறிக்கும் புகழ்,
அதன் பலன்__உணர்வூட்டும் காட்சி.
அறிஞன் எழுத்திலே குதிக்கும் புகழ்,
அதன் பலன்__அமுத காவியம்.
பேச்சாளன் நாவிலே சிந்தும் புகழ்,
அதன் பலன்__சொல்லமுத மழை.
சிந்தனையாளன் மனத்திலே சிரிக்கும் புகழ்,
அதன் பலன்__கருத்தோவியம்.
சிற்பியின் உளியிலே சிதறும் புகழ்,
அதன் பலன்__தெய்வச் சிலை.
வீரனின் வாளிலே மின்னும் புகழ்,
அதன் பலன் __வெற்றி மாலை!!!!
வெற்றி மகுடம்"புகழே,புகழே,புகழே!"என்று தந்து பூவுலகில் அனைவரும் ஆவலோடு விரும்பும் பொருள் புகழ் என்று ஏக்காளமிட்டுப் பாடியிருக்கிறானே,
புகழ் உடம்பு பெற்று விளங்கும் பாரதி.
இந்தப் புகழுக்கு ஒரு சிறு இழுக்கு நேர்ந்துவிட்டால்,
அப்புறம்,
அது "இகழே,இகழே!
நாளை என்ற நம்பிக்கையில் நாளும் வாழும் மனிதன்,
இன்று என்ற நிஜத்தில் வாழ்வது இறைவன் அருளால்தானே!
இன்று வாழ வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றியுடன் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...