Sunday, October 2, 2016

முடிந்த வரை மக்களுக்கு சென்றடைய செய்யுங்கள்..

எங்கள் அம்மாவை இனி சீண்டினால் பொருத்து கொள்ள மாட்டோம்...
உங்களுக்கெல்லாம் என்னதான்டா பிரச்சனை! உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள முதல்வரின் மீது ஒரு பெண்மணியின் மீது இவ்வளவு வஞ்சகமும், வெறியும், வன்மமும் ஏன்?
தமிழக முதல்வர் என்ன கருணாநிதி மாதிரி திருட்டு ரயிலேறி வந்து உலக பணக்காரன் வரிசையில் இடம்பிடித்தவரா?
பிறக்கும் போதே ராயல்டா!
அவங்க அப்பா மைசூர் சமாஸ்தான அரச வைத்தியர்.அவர் அம்மா ஒரு நடிகை அவரும் தமிழ், மளையாளம், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக பல நூறு படங்களில் நடித்தவர்.ஒவ்வொரு படத்திற்க்கும் பல லட்சங்களை சம்பளமாக பெற்றவர்.அரசியலில் பிழைப்பு நடத்தி வாழவேண்டிய அவசியமே முதல்வருக்கு இல்லை!
அவர் தமிழகத்துக்கு இழைத்த துரோகம் என்ன?
கருணாநிதி யை போல் கட்ச தீவை தாரை வார்த்தாரா?
முல்லை பெரியாற்றில் தமிழக உரிமையை கேரளாவிற்க்கு தாரைவார்தாரா?
கர்நாடகாவிடம் காவிரி உரிமையை விட்டுகொடுத்து கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அனைகளை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தாரா?
சர்காரியா கமிஷன் ஊழல் வழக்கிலிருந்து தன்னை காத்துக்கொள்ள காவிரி வழக்கை உச்ச நீதி மன்றத்திலிருந்து வாபஸ் வாங்கினாரா?
ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் நாடகமிருந்து இலங்கையில் லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்தாரா?
தமிழகத்தை பங்கு பிரித்து அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்விக்கு கொடுத்து தனி தனி அதிகார மையங்கள் செயல்பட அதிகாரம் கொடுத்து சாமானியன் சொத்துக்களை கட்டபஞ்சாயத்து, ரவுடிகளை வைத்து மிரட்டி ,போலிஆவணங்கள் மூலம் சாமானியன் சொத்துக்களை அபகரிப்பு செய்தாரா?
வீராணம் திட்டத்தில் ஊழல் செய்தாரா?
2Gயில் 1.76லட்சம் கோடி கொள்ளையடித்து உலக மகா ஊழல் செய்து உலக அரங்கில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தினாரா?
தமிழ்நாட்டிற்க்கு அவர் இழைத்த துரோகம் தான் என்ன? ஒன்றுமேயில்லை!
தொட்டில் குழந்தைகள் திட்டம் கொண்டுவந்து பெண்குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தார்!
கருணாநிதி கொண்டுவந்த மலிவு விலை சாராய விற்பனையை தடுத்தார்!
லாட்டரி சீட்டு விற்பனையை நிறுத்தி பல ஏழை எளியோர் வாழ்க்கையை காப்பாற்றினார்!
தனியார் கொள்ளையடித்துவந்த மணல் மற்றும் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்தி அரசின் வருவாயை உயர்த்தியுள்ளார்!
இதில் சில குறைபாடுகளும், மாற்று கருத்துக்களும் இருக்கலாம் ஆனால் தனி நபர்கள் கொள்ளையை தடுத்து அரசாங்கத்தின் வரிவருவாயை உயர்த்தியுள்ளார்!
புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றி சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்கியிருக்கார்!
பணக்காரன் குழந்தை மட்டுமே பயன்டுத்திவந்த மடிக்கணினியை அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவனுக்கும் கொடுத்து கணினி அறிவை மேம்படுத்தியுள்ளார்!
அனைத்து குடும்ப அட்டைக்கும் 20கிலோ இலவச அரிசி, கோவில்களில் அன்னதானம் திட்டம் மூலமும், அம்மா உணவகம் மூலம் லட்சகணக்கான ஏழை எளியோரின் பசியை போக்கியுள்ளார்!
உச்சநீதிமன்றத்தில் போராடி முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தியுள்ளார்!
காவிரியிலும் சட்டபோராட்டம் நடத்தி இன்று தமிழக உரிமையை மீட்டுகொடுத்துள்ளார்!
இப்படி அடுக்கிகொண்டே போகலாம் தமிழக முதல்வரின் சாதனையை!
தனியொரு பெண்மணியாக இந்த ஆணாதிக்க சமூகத்திலும், அரசியலிலும் பல இழப்புக்களையும், துரோகங்களையும், வலியையும், வேதனைகளையும் தாங்கிக்கொண்டு மிகப்பெரிய அரசியல் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நடத்தும் தமிழக முதல்வரை கண்டு உங்களுக்கு ஏனடா வயிற்றெரிச்சல் ஆணாதிக்க நாய்களே!
தமிழனுடைய பண்பாடே எதிரியை கூட புறம்பேசமாட்டான்.அடுத்தவர் துயரை எண்ணி ஆனந்த படமாட்டான் அந்த நாகரிகம் எங்கே போனது? பண்பாடு என்ன ஆனது?
உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் இப்படித்தான் அநாகரிகமாக நடந்துகொள்வீர்களா? நாதாரிகளே!
உங்களுக்கு தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்க்கும், தமிழர்களுக்கும் நன்மை செய்வது தான் பிரச்சனையென்றால்!
தொடர்ந்து செய்வாருடா!
உடல்நலம் சரியாகி மீண்டும் வலிமையாக வந்து இதைவிட பலமடங்கு நன்மைகளை தமிழ்நாட்டிற்க்கும், தமிழர்களுக்கும் செய்வாருடா!
கோடானகோடி தொண்டர்களின் பொதுமக்களின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்ற எங்கள் #அம்மா..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...