Sunday, November 27, 2016

பின்னணி இசையை பற்றி...

சினிமா இசை­யைப் பொறுத்­த­வரை, பாட்­டைக் கேட்­ப­வர்­கள் பாட்­டைக்­கேட்­ட­வு­டன் ‘ரிப்­பீட்’ பண்­ண­ணும். கேட்­ட­வு­டன் தாளம் போட­ணும். படத்­தில் வரும் அந்த சிச்­சு­வே­ஷ­னுக்­குத் தகுந்த மாதிரி ‘ரியாக்ட்’ பண்ண வைக்­க­ணும். படத்­தில் சோக­மான காட்­சியா? பார்க்­கி­ற­வங்­க­ளை­யும் சோகத்­தில் ஆழ்த்­த­ணும். இப்­படி நான் நினைத்­த­தை­யெல்­லாம் செய்­தி­ருக்­கி­ற­றேன் இந்த இடத்­தில் பாட்டு முடிந்­த­தும் ரசி­கர்­கள் கை தட்­ட­லேன்னா, நான் இசை­ய­மைக்­கி­ற­தையே விட்­டு­டு­றேன்னு சொல்லி, அப்­ப­டியே நிறைய படங்­க­ளில் செய்­தி­ருக்­கி­றேன்.
அந்த இடங்­க­ளில் கை தட்­டல் வந்­தி­ருக்கு. இது என்­னோட திற­மைன்னு நான் சொல்ல வரலே. எல்­லாம் தானா­கவே வருது.
ஒரே சம­யத்­தில் பல படங்­க­ளுக்கு இசை அமைப்­ப­தால் நிச்­ச­யமா தரம் பாதிக்­கப்­ப­டாது. இசை­ய­மைப்­புக்­குன்னு ஒரு சில விதி முறை­களை (ரூல்ஸ்) வைச்­சிக்­கிட்டு அப்­ப­டியே ‘பாலோ’ பண்­ணு­கிற இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்­குத்­தான் இந்­தப் பிரச்­சி­னை­யெல்­லாம் வரும். எனக்கு அப்­ப­டி­யெல்­லாம் கிடை­யாது. நான் எந்த விதி­மு­றை­க­ளை­யும் பாலோ பண்­றது இல்லை. இசை­யில் இயற்­கையா என்ன வருதோ அதன் இஷ்­டம். இப்­படி நான் இசை­யின் மேலேயே பாரத்­தைப்­போட்டு விட்டு வேலை செய்­கி­றேனே தவிர என்னை நானே பெரிசா சார்ந்­தி­ருக்­கி­ற­தில்லே. இசை­யில் எந்த ராகம் வந்­தா­லும் சரி, எனக்­கொண்­ணும் கவ­லையே கிடை­யாது.
உதா­ர­ணமா ஒரு மகிழ்ச்­சி­யான சீன் (காட்சி) வரு­துன்னு வைச்­சுக்­கங்க. அதில் ஒரு பாட்டு, அந்­தப்­பாட்­டுக்கு நான் ட்யூன் போடு­றப்ப சுப­பந்­து­வ­ரா­ளி­ரா­கம் வரு­துன்னு வைச்­சுக்­கங்க. இது துக்­க­மான ராக­மாச்­சேன்னு நான் கட்­டுப்­பாடு எதை­யும் விதிக்­கி­ற­தில்லே.அந்த நேரத்­தில் எது வருதோ அது­தான் ராகம். அது­தான் தாளம் ,அது தான்­மி­யூ­சிக், நான் வந்து மண்­டையை உடைச்­சிக்­கிட்டோ, முடி­யைப்­பிச்­சிக்­கிட்டோ மியூ­சிக் அமைக்­கி­றதே இல்லை. வந்து கேட்­சி­ற­வங்­க­ளுக்­குப்­பி­டிக்­குதா வச்­சுக்கோ.பிடிக்­க­லியா, விட்­டுடு அவ்­வ­ள­வு­தான். கேட்­கி­ற­வங்­க­ளுக்­குப்­பி­டிக்­குது பிடிக்­கா­மப் போகு­துங்­கி­ற­தைப் பற்றி எனக்­குக்­க­வ­லையே இல்லை.
முதல்ல நான் படத்தை முழு­மை­யைாப் பார்க்­கி­றேன். அப்ப எந்த ஐடி­யா­வும் வராது. அப்­பு­றம் ரிக்­கார்­டிங் தியேட்­டர்லே நாற்­பது, ஐம்­பது மியூ­சி­ஸி­யன்­கள் காத்­தி­ருக்க மியூ­சிக் போடு­வ­தற்­காக ஒவ்­வொரு ரீலா போட்­டுக் காட்­டு­றப்ப மியூ­சிக்கை எங்கே ஸ்டார்ட் பண்­ண­லாம். எங்கே பினிஷ் பண்­ண­லாம் என்று அந்த நேரத்­தில் செய்த கொள்­கி­றேன். அந்­தப் படத்­துக்கு என்ன தேவையோ, அதை மட்­டுமே நான் பார்க்­கி­றேன். படத்­தில வர்ற கேரக்­டர் அந்த இடத்­தில என்ன சொல்­றான்..... அவ­னோட உள்­மன உணர்வு என்ன.... அந்த இடத்­தில பிக்­சர் ட்ராக் ஆகுது....கொஞ்­சம் வேகம் ஏற்­ப­டுத்­தித்­த­ர­ணும்....இல்­லாட்டி போர­டிக்­கும். இப்­படி பார்ம் பண்­ணிக்­கொள்­கி­றேன்.
இங்கே கம்­போஸ் பண்­ணு­கிற மற்ற இசை­ய­மைப்­பா­ளர்­க­ளும் இந்த மாதிரி இடங்­க­ளில் மியூ­சிக் தரு­வார்­கள். நான் மியூ­சிக் தர­மாட்­டேன். அப்­ப­டியே மியூ­சிக் வேண்­டும் என்ற நிலை இருந்­தால் அவர்­கள் அந்த இடத்­தில் பயன்­ப­டுத்­து­கின்ற இசைக்­க­ருவி என்­ன­வாக இருக்­கும்னு யோசிப்­பேன். அது உடனே என் ‘மைண்­டில்’ வரும். நான் அதைப்­ப­யன்­ப­டுத்த மாட்­டேன். இப்­ப­டி­இ­ருக்­கும் விதி­களை நான் மீறு­கி­றேன். புதிய இசைக்­க­ரு­வி­யைப்­ப­யன்­ப­டுத்­து­கி­றேன். அதுவே புது­மை­யாகி விடும்...  இசைக்கு ராஜா ராஜாதானே!

Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...