Friday, November 25, 2016

ஒரு அறிவியல் பூர்வமான அலசல்..

அனைவரும் இதை படித்துவிட்டு
சொல்லுங்கள் கோவில் வேண்டுமா
வேண்டாமா என்று!!!!!!
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா
ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது
என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்
கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது
100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம்
விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும்
இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான
லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு
ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள்
மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன்
ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த
சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம்
கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத்
போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய
சிலைதான் இந்த மையப்பகுதியில்
வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது
மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான்
அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம்
காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ்
எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம்
சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே
கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான்
கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த
மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு
தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு
தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த
எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக்
கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று
சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து
இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது
அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக
அதுவும் வாசலில் இடது மற்றும் வலது
புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி.
ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த
கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து
வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று
பாதை இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே
எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே
உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த
மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி
நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன்
மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ்
காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய்
தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக
அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு
(இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்)
அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி
வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த
எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு
டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும்,
மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும்
அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு
அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான்
மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10
ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே
நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும்
ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம்
மற்றும் எத்தனை வருடம் பால், தயிர்,
பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம்,
விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற
எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம்
வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும்
சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு
நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி
(புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிர
ாம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர்
செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை
கோயிலில் உள்ளது போல் எங்கும்
கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில்
உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய்
உட்கொண்டவர்களுக்கு இது ஒரு
ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம்
ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த
உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு
சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில்
இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி,
வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம்
இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல்
சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும்
ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று
வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும்
அண்டியது இல்லை என்பதற்கு இதுதான்
காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம்
சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை
காட்டும் போது தான் கதவை திறக்கும்
காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக
எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து
அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர
வரும் போது தான் கதவை அல்லது திரையை
திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு
வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை
எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள்
உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது
தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர
வேண்டாம் என கூறுவதற்கும் இது தான்
முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே
மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள்
உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு
தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று
இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த
தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல
பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை
கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு
கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி
மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு
வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது
சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும்
எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும்
இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள்
இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும்
என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து
பயணம் செய்திருப்பினும் அந்த சில
நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த
உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு
வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம்
உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான்
இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும்
இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ்
தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம்
இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ்
இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ்
மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண
கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன்
படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம்
இல்லாமல் போன காரணம் கோயில்
கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு
சிறந்த மின் கடத்தி ஆம் இது தான்
பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங்
அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி
மற்றும் இது தான் கோயிலின் வெளி
பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல்
புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில்
செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா
ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும்
ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில்
உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித
ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை
விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை
கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின்
உடல் மட்டுமல்ல அவனின் மனதும்
மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட
கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த
எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது
தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும்
புளியோதரை ஆகட்டும் சர்க்கரை
பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு
ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட
முடியாது என்பது தான் நியதி. சில
கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல்
இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே
உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற
மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான்
இந்த கோயில் டெக்னாலஜி.
கோவில் ஏன்????
------------------------------
கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
என்பார்கள்.அது எதற்கு என்றான் பல
உண்மைகள் அதில் உள்ளன.
*கோபுரம்.
-----------------
ஆலய கோபுரத்தை விட ஊரில் வேறு எந்த
கட்டிடமும் உயயர்வாக இருக்கக்கூடாது
எனபது அந்நாளையது எழுதப்படாத
நீதி.ஏன்னென்றால் கோபுர கலசங்களில்
வரகு,சாமை,கார்,சம்பா......முதலிய நெல்
தானியங்களை நிரப்பி வைப்பார்கள் நெல்
நிரப்பப்பட்ட கூர்மையான கலசம் மிகச்சிறந்த
இடி தாங்கியாக பயன் படும்.அதுவும்மி
ல்லாது நெல் பற்றாக்குறை வரும்பொழுது
அதை உபயோகிப்பார்கள்.நெல் நிரப்பப்பட்ட
கூர்மையான கலசம் மிகச்சிறந்த இடி
தாங்கியாக பயன் படும்.
கோபுரங்கள் மிக மிக பெரியதாக இருக்கும்
ஏனெனில் அக்கால கருவூலமாக அது
பயன்படுத்தப்பட்டது.போர்காலங்களில்
அவ்வூர் மக்களை பாதுகாப்பாக தங்க
வைக்கவும் பயன்பட்டது.இராணுவத்தினால்
ஆயுத கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டது.
*குளம்.
------------
மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க.
*மண்டபங்கள்.
------------------------
அரசவையாக,நீதிமன்றமாக,கலைக்கூடம
ாக,பாடசாலையாக........ பயன்பட்டது.
*தல விருட்சம்.
------------------------
மர வளர்ப்பின் முக்கியத்தை வலியுறுத்த.
*பிராகாரம்.
-------------------
மக்கள் ஒன்று கூட,ஊர் நன்மைக்காக
பொதுக்கூட்டங்கள் கூட்ட,சந்தை
அமைக்க,பிள்ளைகள் விளையாடி மகிழ,..........
*பல அறைகள்.
-------------------------
தானியம் சேகரிக்க,கருவூலமாக,பொக்கிஷ
அறையாக,மக்கள் பதிவுகளை வைக்க,நகராட்சி
அலுவலகமாக.........
*சிற்ப்பங்கள்.
----------------------
நம்மால் மறக்கப்பட்ட பரப்பல உண்மைகளை
நமக்கு நினைவுறுத்த.
இந்து ஆலயங்களா இல்லை மருத்துவ ஆலயங்களா?????
--------------------------------------------------------------------------------------
என்ன என் உயிரினும் மேலான இந்து
சொந்தங்களே!!!!! நான் என்ன சொல்ல
வருகிறேன் என்று உங்களுக்கு
புலப்படுகின்றதா? நாள்தோரும் ஏதேனும் ஒரு
ஆலயத்துக்கு சென்று வந்தால் நாம் நல்ல
ஆரோக்கியத்தோடு இருக்களாம் என்பது
நிதர்சனம். ஒன்றன் பின் ஒன்றாக கூறுகிறேன்
கேளுங்கள்.
1.கை கால்களை கழுவுதல்:-
கோவிலிற்குள் நுழைவதற்கு முன் நமது கை
கால்களை நீரால் கழுவிவிட்டு உள்ளே
செல்லுதல் வேண்டும். அவ்வாறு நாம்
செல்லும் போது கிருமிகளை ஆலயத்துக்கு
வெளியிலேயே அக அசுத்தங்களை
கலைந்துவிட்டு செல்கிறோம்.
2.கோபுர வழிபாடு:-
ஆண்களாக இருந்தால் கோவில் கோபுரத்தை
நோக்கி இரு கைகளை மேலே தூக்கி
வணங்குதல் வேண்டும். அவ்வாறு
செய்வதனால் கோவில் கோபுர கலசத்தில்
உள்ள தங்கம் வெள்ளி, பித்தலை ஆகிய
உலோகங்களோடு சேர்ந்த நவ தானியங்கள்
மூலம் பரப்பப்படும் மின் காந்த ஈர்ப்பு
சக்திகுள் நமது உடல் வருகிறது. அந்த
நொடியில் இருந்து நமது உடல் நல்ல ஈர்ப்பு
சக்தி (Positive Energy)க்கு ஆட்படுகிறது.
3.விநாயகர் வழிபாடு:-
விக்கி போடுதல், ஞான குட்டு வைத்துக்
கொள்ளுதல், அத்தனையும் ஆசனங்கள் இந்த
ஆசனங்களை செய்யும் போது நமது நரம்பு
மண்டலங்கள் புத்துணர்ச்சி பெருகிறது.
4.மூலவர் வழிபாடு:-
ஆலயங்களில் மூலவரை பல வகை
மலர்களாலும் துளசியாலும், வில்வ
இலைகளாலும் இன்ன பிற மூலிகைகளாலும்
அலங்கரிக்கப்பட்டிருக்கும் அது நுகர்தலின்
மூலம் நமது உடலுக்குள்ளும் அதன் பயன்
சேரும்.
5.தீபாராதனை:-
பல ஆலயங்களில் சூடன்களின் மூலம் தீப
ஆராதனை இருக்கும் சில ஆலயங்களின்
விளக்கெண்ணெய் மூலம் தீப ஆராதனை
இருக்கும் இரண்டும் கிருமி நாசினியாக
செய்படுகிறது.
6.விபூதி, குங்குமம், மஞ்சல், சந்தனம்:-
இந்த நான்கும் வாசனை பொடிகள் மட்டும்
மல்ல சிறந்த கிருமி நாசினியும் கூட.
அதிலும் இந்த விபூதியின் மகிமை
இருக்கிறதே சொல்லில் அடங்காதது. என்
உயிரினும் மேலான இந்து சொந்தங்களே!!!!
உங்களுக்கு ஏதேனும் சிராய்ப்பு காயங்கள்
இருந்தால் அதன் மீது விபூதியை போட்டு
வாருங்கள் இரண்டே நாட்களில் காயத்தின் வடு
கூட தெரியாமல் மறையும்.
7.பிரசாதம்:-
துளசி தண்ணி, தேங்காய் தண்ணி, புளி சாதம்,
தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், பொங்கல்
இவைகளே கோவில்களில் பிரசாதமாக
வழங்கப்படுகிறது அத்தனையும் மருத்துவ
குணம் வாய்ந்தது.
8.பிரகாரத்தை சுற்றி வருதல்:-
நீங்கல் நன்றாக கணகெடுத்துக் கொண்டால்
கோவில் பிரகாரத்தை மூண்ரு முறை சுற்றி
வருதல் வேண்டும். அப்படி கணக்கில்
வைத்துக் கொண்டால் நீங்கள் குறந்தபட்சம் 1
இல் இருது 3 கிலோ மீட்டர் நடை பயிர்ச்சி
செய்வதற்கு சமம்.
9.குரு தியானம்:-
அனைவரும் குரு பகவானிடத்தில் 5 நிமிடம்
தியானம் இருந்து செல்லுதல் வேண்டும் அதன்
மூலம் மன நிம்மதி கிடைக்கிறது. மனதிற்கு
அமைதியான தியானமும் கிடைக்கிறது.
10.நவ கிரக வழிபாடு:-
நவ கிரகங்களை 9 முறை சுற்றி வந்து
வழிபடுதல் வேண்டும். அங்கு நவ கிரகங்களை
9 வகையான எண்ணெய்களின் மூலம்
அபிஷேகம் செய்திருப்பார்கள். அதன் மருத்துவ
குணங்களும் நமது உடலையே சாரும்.
11.கொடி மர வழிபாடு:-
எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்தின் முன்
விழுந்து வணங்குதல் வேண்டும். அதுவும்
ஒரு வகையான ஆசனமே.
கோயில் ரகசியங்கள் .
*************************
கர்ப்பக்கிருக அமைப்பு, அர்ச்சனை அபிசேக
ஆராதனைகளின் விஞ்ஞான விளக்கம்:-
ஓத்த அதிர்வு கொண்ட காற்றுமண்டலம், ஒரு
குறிப்பிட்ட அதிர்வெண்ணுடைய ஒலிக்குப்
பெரும் ஓசை எழுப்பவல்லது (Maximum
Sound) என்பது தெரிந்ததே. ஆகம சிற்ப
சாத்திரங்கள், விக்கிரகத்தின் உயரத்துக்கேற்ப
கர்ப்பக்கிருகத்தின் உள் அளவை வரை
வரையருத்திருக்கின்றன. ‘ஓம்’ என்ற ஒலிக்குக்
கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்று மண்டலம்
ஒத்த அதிர்வு அளிக்கும்படி அதன் உள்ளளவு
அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது காற்றின்
ஒவ்வொரு மூலக்கூறும் பெரும் வீச்சுடன்
ஒத்த அதிர்வு அடைய முடியும்.
ஆலயத்தில் மூல விக்கிரகத்திற்கு தண்ணீர்,
எண்ணெய், தேன், பால், தயிர், விபூதி
ஆகியவற்றை கொண்டு அபிசேகம் செய்வதன்
தத்துவம். இந்த ஒவ்வொரு பொருளுக்கும்
மின்கடத்தும் திறன் (conductivity)
மாறுபடுகிறது.
தயிர், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம்
செய்யும்போது விக்கிரகத்தின் மின்கடத்தும்
திறன் அதிகமாகிறது. எண்ணெய், தேன்,
விபூதி, குங்குமம், பூ ஆகியவற்றால்
அபிசேகம் செய்யும்போது இதன் மின்கடத்தும்
திறன் குறைந்தாலும் நிலையாக உள்ளது
குறிப்பிடத்தக்கது.
மேலும் அபிசேகப் பொருள்களான குங்குமம்,
பால், தயிர், தேன், தண்ணீர் ஆகியவற்றின் pH
மதிப்பும் அளவிடப்பட்டுள்ளன. ஒரு
திரவத்தின் pH-ன் மதிப்பு அதிகரிப்பது, அதன்
எதிர்மின்னூட்டம் (Negative ION
Concentration) அதிகரிப்பதையே குறிக்கும்.
குங்குமம், சந்தனம், மஞ்சள், தண்ணீர்
ஆகியவை அதிக pH மதிப்பு கொண்டவை.
இவற்றைக் கொண்டு அபிசேகம் செய்வதால்
கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்று
மண்டலத்திலும் எதிர்மின்னூட்டங்கள்
அதிகரிக்கும்.
அபிசேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை
செய்யும்போது காற்று மண்டலத்தில் ஒரு
மின்தேக்கியை வைத்து மின்னூட்டதை
அளந்தால் தூபம், தீபம் காட்டும்
மாறுபாட்டால் மின்னூட்டம் மாறுபடுவது
(Charge) தெரியும்.
எதிர்மின்னூட்டமும் ஈரப்பதமும் உள்ள காற்று
மண்டலம் கர்ப்பக்கிருகத்தினுள் அமைந்து
உள்ளது. அந்தக் காற்று மண்டலத்துள் ‘ஓம்’
என்ற ஒலியுடன் (பிரணவ மந்திரம்) அர்ச்சனை
செய்யும்போது அந்த ஓலி விக்கிரகத்தில்
பட்டு எதிரொலிக்கிறது. இதனால் அந்தக்
காற்றுமண்டலத்தில் இதனால் அந்தக்காற்று
மண்டலத்தில் பெரும் அலைவும்;
முத்ததிர்வும் (Maximum Amplitude at
Resonance) கிடைக்கிறது.
இந்நிலையில் ஏற்படும் காற்றுவீச்சு எதிரே
உள்ள பக்தர்களின் மேல்படும்போது
அவர்களுக்கு உள்ளவளமும் – உடல்நலமும்
கிடைக்கிறது.
இந்த விஞ்ஞான உண்மையை அன்றே
அறிந்திருந்த நமது முன்னோர்கள் இத்தகைய
ஆலயங்களை மலைகள் மீதும்,
கடற்கரையிலும், மூலிகைகள் அடங்கிய
சொலைப்பகுதிகளிலும், அருவிக்கரையிலும்,
ஆற்றங்கரையிலும் கட்டி இருக்கிறார்கள். இந்த
இடங்களில் உள்ளத்தூயமையும் உடல்
நலமும் கிட்டுகிறது.
இதற்காகத்தான்
ஆறுகால அபிசேகங்கள் தொடர்ச்சியாக
செயல்பட்டு வருகின்றன. அர்ச்சனைகளும்
ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன.
இதன்
விளைவாக விக்கிரத்தில் தொடர்ந்து
அதிர்வுகள் நிலைத்திருக்கும். ஆலயத்தில்
உள்ள கர்ப்பகிருகத்தின் அமைப்பு இதனை
சேமித்துப் பாதுகாக்கும் வண்ணம்
அமைக்கப்பட்டிருக்கிறது.
மூலவிக்கிரகம் ஒலி
அலைகளின் எதிரொலியை எழுப்பவில்ல
விதத்தில் அமைந்துள்ளது. அடியில்
பொருத்தப்பட்டுள்ள எந்திரத்தகடு ஆற்றல
சேமிப்புக்கலனாகவும் காற்று மண்டலம் அந்த
சக்தியை ஏற்றிச் செல்லும் முறையிலும்
முறையிலும் அமைந்துள்ளன. இதன்
முழுப்பலனும் வழிபடவரும் பக்தர்களுக்கு
போய்ச் சேர்கிறது. அவர்கள் இவற்றை
ஏற்பவர்களாக (Receiver) விளங்குகிறார்கள்.
கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்றுமண்டலத்தில்
பிராணவாயு அழுத்தம் அதிகரிக்கிறது. அந்தக்
காற்று மண்டலம் பிராணவாயுக் கூறுகளை
அதிகமாக பெறுவதால் பதர்களின் உடல்நலம்
சீர்பெற உதவும். ஒலியின் திசைவேகம்
ஈரப்பததில் அதிகமாக இருக்கும். ஆகையால்
எப்போதும் அபிசேக நீரினால் ஈரமாகவே உள்ள
கர்ப்பக்கிருகம் இந்த நிலையை ஊக்குவிக்கும்
விதமாக அமைந்துள்ளது.
ஆலயங்களின் அமைப்பும் அதன் உள்ளமப்பும்
இவ்வாறு வேதாந்தபூர்வமகவும்,
விஞ்ஞானபூர்வமாகவும் கணிக்கப்பட்டே
அமைந்திருக்கின்றன. இதனால் மனிதர்களுக்கு
உடல்நலமும், உள்ளவளமும் கிடைக்கின்றது.
யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது
குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும்.
இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள
உச்சாடனத்தின் அளவு, உருக் கொடுத்த
முறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன
ஒருமைப்பாடு, யந்திரம் எழுதிய உலோகத்
தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை
வணங்கும் முறையைப் பொறுத்து அமையும்.
கோயில்களில் இருக்கும் சக்தியானது
மூலவரிற்கு கீழே வைக்கப்படும்
யந்திரத்தகட்டினாலேயே உண்டாகிறது. இந்த
தகடு யாகங்கள் மூலம் உரு
கொடுக்கப்படுகிறது. அத்துடன் நித்திய ப
+சைகள் முறைப்படி செய்யப்படுகின்றன.
இதன் கால அளவு 13 வருடகாலங்கள்.
அதனாற்தான் 13 வருடத்திற்கு ஒரு முறை
கும்பாவிசேகம் செய்யப்பட்டு யந்திரத்தகடுகள்
புதிப்பிக்கப்படுகின்றன.
ஆக நமது ஆலயங்களை முறையாக
வழிபட்டாலே ந்மது தீய எண்ணங்களையும்
துளைத்துவிடலாம். சுகமுள்ள
ஆரோக்கியமான வாழ்வு பெறலாம். என்
உயிரினும் மேலான இந்து சொந்தங்களே!!!!
நான் மீண்டும் சொல்கிறேன் அற்தங்கள்
நிறைந்ததுதான் நமது இந்து மதம்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...