Tuesday, November 29, 2016

நன்றி கடன்பட்டுள்ளேன்!

'ராஜா சார் இசை­யில், ‘பூவே பூச்­சூ­டவா’ படத்­துக்­குத்­தான் முத­லில் எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்­தாங்க. ஆனா, அந்­தப் படத்­துக்கு முன்­னா­டியே ‘நீதானா அந்­தக்­கு­யில்’ படத்­துல ஒரு பாடல் பாட வச்­சார் ராஜா சார். அப்போ எனக்­குப் பெரிசா கரெ­க்க்ஷன் எது­வும் சொல்­லலை.
‘பூவே பூச்­சூ­டவா’ படத்­தில் பாடி முடிச்­ச­தும், கன்­ஸோ­லுக்­குப் போனேன். ‘என்ன கரெ­க்ஷன்னு நான் சொல்ல மாட்­டேன். நீயே கேட்டு, எங்­கெங்க தப்பு பண்­ணி­ருக்­கேன்னு செல்ப் அன­லைஸ் பண்­ணு’னு சொல்­லிட்­டார். நானும் பாட­லைத் திரும்­பத் திரும்­பக் கேட்­டுட்டு, எங்­கெல்­லாம் தப்பு பண்­ணி­ருக்­கேன்னு எனக்கு பிடி­பட்­ட­தைச் சொல்லி, ‘கரெ­க்ஷன் பண்­ணட்­டுமா?னு கேட்­டேன். ‘வேணாம், இந்­தப் பாட்டு இப்­ப­டியே போகட்­டும். இதை­யெல்­லாம் மன­சுல வச்­சுக்­கிட்டு, அடுத்­த­டுத்த பாடல்­கள் பாடும்­போது கவ­னமா இரு’னு சொன்­னார்.
குரல்ல எக்ஸ்­பி­ர­ஷன்ஸ் கொண்டு வர்­ற­துக்­காக, ஜான­கி­யம்மா பாடல்­களை நிறைய கேட்­கச் சொல்­வார். ‘ராசாவே உன்னை நம்பி…’ பாட்டை ஜான­கி­யம்மா பாடும்­போது, ‘ஒண்­ணுமே தெரி­யாத பொண்ணு பாடுற மாதிரி இருந்தா போதும்’னு சொல்லி, ட்யூன் மட்­டும் சொல்­லிக் கொடுத்­தி­ருக்­கி­றார் ராஜா சார். ‘அதை அவங்க எப்­ப­டிப் பாடி­யி­ருக்­காங்­கனு பார். அவங்­க­ளோட ஒவ்­வொரு பாட்­டும் இப்­ப­டித்­தான், அதைத் தொடர்ச்­சியா கேளு’னு அட்­வைஸ் கொடுத்­தார்.
‘சிந்து பைரவி’ படத்­தில் பாடு­வ­தற்­காக என்­னைக் கூப்­பிட்­டி­ருந்­தாங்க. அந்த சம­யத்­துல நான் கேர­ளா­வுல் இருந்­தேன். எனக்கு எம்.ஏ.எக்­ஸாம்ஸ் நடந்­துக் கிட்­டி­ருந்­துச்சு. ‘ராஜா சார் பாட்டை மிஸ் பண்­ணி­டக்­கூ­டா­து’னு சொல்லி, அப்பா என­னைக் கூட்­டிட்டு வந்­தார். பாட்­டப் பாடிட்டு, அன்­னைக்கு இரவே கேரளா திரும்­ப­ணும். அந்­தப் பாடல் பதிவு முடிஞ்­ச­தும், ‘இன்­னொரு பாட்டு பாட­ணும். நாளைக்­கும் இங்­கேயே இருக்க முடி­யுமா?னு ராஜா சார் கேட்­டார். மறு­நாள் எக்­ஸாம் இருக்­கும் விஷ­யத்தை, ரொம்ப தயங்­கித் தயங்கி ராஜா சார்­கிட்டே அப்பா சொன்­ன­தும், ‘எம்.ஏ.லாம் அப்­பு­றம் பண்­ணிக்­க­லாம். அதுக்­கும் மேல வரப்­போ­றா’’னு ராஜா சார் சொன்­னார். ஒரே குழப்­பம் ‘படிப்பு விஷ­யா­மாச்­சே’னு அம்மா தயங்­கி­னாங்க. ‘சரி, லேட்டா எக்­ஸாம் எழு­திக்­க­லாம்’னு முடிவு பண்ணி, மறு­நாள் தங்­கி­யி­ருந்து அந்­தப் பாட்­டைப் பாடி­னேன். இன்­னைக்கு வரைக்­கும் அந்­தப் பாடல்­தான் எனக்கு பெரிய அட்­ரஸா அமைஞ்­சது. எங்கே போனா­லும் இப்­ப­வும் எல்லா மேடை­க­ளி­லும், ‘சிந்து பைர­வி’­யில் வர்ற ‘பாட­றி­யேன் படிப்­ப­றி­யேன்…’ பாட்­டைப் பாடச் சொல்­லிக் கேட்­க­றாங்க. இன்­னைக்கு ஒரு பாட­கியா நான் நாலு­பே­ருக்­குத் தெரி­யு­றேன்னா, அதுக்கு ராஜா சார்­தான் கார­ணம். அவ­ருக்கு நான் ரொம்­பவே நன்­றிக்­க­டன் பட்­டி­ருக்­கேன்’ என கண்­கள் நெகிழ்ச்­சி­யில் மிதக்க சொல்­கி­றார் சித்ரா....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...