Thursday, November 17, 2016

தர்ம காரியங்களையும் நிறையச் செய்,.....

கடவுள் வழிபாட்டையும் தர்ம காரியங்களையும் நிறையச் செய், அதுவே மேலும்மேன்மையடைய வழியாகும்.
சாமான்யமான மண்ணை எடுத்து ஜலத்தில் கரைத்தால் ஜலம் பூராவும்கலங்கிவிடும். ஆனால் மணலைத் தண்ணீரில் கரைத்தால் தண்ணீரில் கலக்கம்
ஏற்படாது. அதேபோல் உலகத்தில் மூர்க்கர்கள் இருப்பது உலகத்திற்குக் கலகத்தைச்செய்யும். ஆனால், ஆண்டவரின் அருள் பெற்றவர்கள், ஆத்ம ஞானிகள் உலகில்இருப்பதால் உலகத்திற்கு எத்தகைய கெடுதலும் ஏற்படாது.
மண் தண்ணீரில் கரைந்துவிடுகிறது. நல்ல மணல் தண்ணீரில் கரைவதில்லை.அதேபோல் சாமான்ய மனிதர்கள் உலகில் தாமும் கலந்துவிடுகின்றனர். ஆத்மஞானிகள் உலகோடு கலக்காமல், ஆனால் உலகிலேயே இருக்கின்றனர். தராசில்ஒருபக்கம் அளந்து காட்டும் படிக்கல்லும், மற்றொரு பக்கத்தில் அது அளவு
காட்டும் பொருளையும் காண்கிறோம். இரும்புப் படிக்கல்லும் உயர்ந்த பொருளும்சமமானதளவில் இருந்தாலும், உயர்ந்த பொருளுக்குப் போடும் மனமதிப்பை
சாமான்ய கல்லுக்குப் போடமாட்டார்கள்.
சாமான்யர்களும் ஞானியும் ஒரேமாதிரி
இருந்தாலும் தன்மையில் மேலோங்கி இருக்கிறார்கள். அதேபோல் படித்தவனும்,படிக்காதவனும் ஒரே காரியத்தில் சமமாக ஈடுபட்டாலும் படித்தவனுக்கு
கொடுக்கும் மதிப்பைப் படிக்காதவனுக்குக் கொடுக்க முடியாது.
கடிகாரத்தின் முள் நகருவது தெரியாமல் எவ்விதம் நகர்ந்துபோய்க்கொண்டே இருக்கிறதோ அதே போல் நம்முடைய மனத்தில்இன்னதைத்தான் நினைக்கிறோம் என்று தெரியாமல் எதையாவது நினைத்துக்கொண்டே தான் இருக்கிறோம். கடிகாரத்தில் சாவி இல்லாவிட்டால் முள்நகருவதில்லை. அதேபோல் விழிப்பும் சொப்பனமும் இல்லாவிட்டால் நம் மனம்ஒன்றையும் சிந்திப்பதில்லை.
கடிகாரத்திற்கு ஒரு நாளைக்கு ஒருமுறை சாவி கொடுத்தால் போதும். நமக்குஇரண்டு மூன்று தடவை தினமும் ஆகாரம் கொடுக்க வேண்டும். கடிகாரத்திற்கு
சாவி அதிகம் கொடுத்து விட்டாலும் அது சீக்கிரம் கெட்டு விடும். குறைவாகக்கொடுத்தாலும் அடிக்கடி நின்றுவிடும். அதே போல் நமக்கும் உணவை அதிகமாகச்
சாப்பிட்டாலும் கெடுதல் உண்டாகும். கடிகாரத்திற்கு அளவாகச் சாவி கொடுப்பதுபோல் உடலக்கும், குறையாமலும் அதிகமாகாமலும் உணவை அளிக்க வேண்டும்.
அறிவுள்ள ஒருவனால் சாவி கொடுக்கப்பட்டு ஜடமான கடிகாரம் ஓடுகிறது.
அதேபோல் பேரறிவு சொரூபமாய் உள்ள பரம்பொருளின் சக்தியினால் இந்த
ஜடமான சரீரம் உலகில் நடமாடுகிறது.
மின்விசிறி சுற்ற வேண்டுமானால் ஸ்விட்சைப் போடுகிறோம், அதுசுற்றுகிறது. அதேபோல் நாம் நல்வினை தீவினைக் காரியங்களைச் செய்ததன்
பலனாக சம்சார சாகரத்தில் சுற்றுகிறோம்.
மின்விசிறியின் காற்று சிலருக்கு ஒத்துக்
கொள்ளும் - சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. அதே போல் உண்மையான சுகத்தைவிரும்புகிறவருக்கு இந்த சம்சார சாகரத்தில் ஏற்படும் சுகதுக்கங்கள் பிடிக்காது.
சாமான்ய மனிதர்கள் இந்த சம்சாரத்தில் ஏற்படக்கூடிய சுகத்தையே பெரிதாக நினைத்துவிடுவார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...