Sunday, November 20, 2016

ஒவ்வொரு பாட்டுக்குள்ளும் ஒரு கதை இருக்கும்! – மனோபாலா



“பார­தி­ராஜா சார்­கிட்ட அசிஸ்­டண்ட் டைரக்­டரா ஒர்க் பண்­ணப்போ, எனக்கு இளை­ய­ரா­ஜாவோட சேர்ந்து பணி­யாற்­றும் வாய்ப்பு கிடைச்­சது. கம்­போ­ஸிங் சம­யத்­திலே கண்­ண­தா­சன் வந்து உட்­கார்ந்­தது, நாங்­கள் ஒருத்­த­ருக்­கொ­ருத்­தர் பேசிக்­கொண்­டது எல்­லாமே இன்­று­வரை மறக்க முடி­யாத அனு­ப­வங்­கள். 'இளை­ய­ராஜா என்­னப் பாட்டு போடப் போறாரோ…?' என்ற ஆர்­வ­மும், எதிர்­பார்ப்­பும் பெருசா இருக்­கும். ‘புதிய வார்ப்­பு­கள்’ படத்­திலே ஒர்க் பண்­றப்போ இளை­ய­ராஜா என்­கிட்ட, ‘என்­னப்பா! உங்க டைரக்­ட­ருக்கு என்ன பாட்­டு­தான் வேணும்? எந்த டியூன் போட்­டா­லும் ‘பிடிக்­கலே… பிடிக்­க­லேன்னே சொல்­றா­ரு’ன்னு கேட்­டாரு. இந்­தப் பாடல் காத­லோட உச்­சக்­கட்ட பாடல்ங்­க­ற­தால, ஸ்லோகம் பாட்டு ‘ஐங்­கிரி… நந்­தி­னி…’ங்­கற மாதிரி இருந்தா நல்லா இருக்­கும்னு சொன்­னேன். அப்ப போட்­ட­து­தான் ‘தந்­தன தந்­தன தாளம் வரும்…’ பாட்டு. அதுக்­குப் பிறகு, ‘நிறம் மாறாத பூக்­கள்’, ‘கல்­லுக்­குள் ஈரம்’ன்னு அவ­ரோ­ட­தான் பய­ணம். ரீரிக்­கார்­டிங்­குன்னா முதல் ஆளா நான்­தான் ஆஜ­ரா­வேன். 
அவ­ருக்கு இந்தி பாடல்­கள் கேட்­ப­துன்னா ரொம்ப பிடிக்­கும். நவ்­ஷத் மாதி­ரி­யான ஜாம்­ப­வான்­கள் பாடல்­களை எல்­லாம் விரும்­பிக்­கேட்டு, மகிழ்ச்­சியா இருப்­பாரு. அந்த சம­யத்­திலே, ‘இந்த அள­வுக்கு நாம வள­ர­லையே’ என்ற ஆதங்­கம் அவ­ருக்கு இருந்­தது. அப்ப நான் அவர்­கிட்ட, ‘நீங்க அதை­யும் தாண்டி வளர்ந்­துட்­டீங்­க’ன்னு சொல்­லு­வேன். நான், சுந்­தர்­ரா­ஜன், ரங்­க­ரா­ஜன், மணி­வண்­ணன் என நாலு பேர், தெலுங்கு டைரக்­டர்ஸ், தமிழ் டைரக்­டர்ஸ்ன்னு எல்லா பெரிய பெரிய இயக்­கு­நர்­கள் எல்­லா­ருமே அவ­ருக்­கா­கக் காத்­தி­ருந்­தோம். இந்த கொடுப்­பிணை வேறு எந்த மியூ­சிக் டைரக்­டர்­ஸுக்­குமே கிடைக்­கலே; இனி­மே­லும் கிடைக்­காது. அவ­ரு­டைய ‘உதி­ரிப்­பூக்­கள்’ல இருந்த பாட்டை வச்­சுத்­தான் நானும் ஆர்.வி. உத­ய­கு­மா­ரும் ‘கிழக்கு வாசல்’ படம் பண்­ணி­னோம். இளை­ய­ரா­ஜா­வின் ஒவ்­வொரு படத்­தோட பாட­லும் வேறொரு கதைக்கு அஸ்­தி­வா­ரமா அமைஞ்­சி­ருக்கு என்­பது அவர்­கிட்ட இருக்­கிற பிளஸ்!”என்­றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...