Saturday, November 26, 2016

இளை­ய­ராஜா பற்றி சேரன்.......

'தேசி­ய­கீ­தம்', 'மாயக்­கண்­ணாடி' என இரண்டு படங்­க­ளில் இளை­ய­ராஜா சாரோடு இணைந்து பணி­யாற்றி ருக்­கி­றேன். இந்த இரண்டு படங்­க­ளுமே அவ­ருக்­கான ஸ்கோப் உள்ள படங்­கள்னு சொல்ல முடி­யாது. ஆனா­லும், அவர் அதில் பண்­ணிய பிஜி­எம், எனக்கு பேக்­ர­வுண்ட் ஸ்டோரி கத்­துக்க ரொம்ப உத­வியா இருந்­துச்சு. அது­தான் இளை­ய­ராஜா!
இளை­ய­ராஜா சாரின் இசை நம்ம படத்­துக்­குக் கிடைக்­கி­றது கட­வுள் கிரு­பை­தான். சில சம­யங்­க­ளில் உடனே கிடைச்­சு­டும்; சில சம­யங்­க­ளில், நாம தேடிக்­கிட்டே இருக்­க­ணும். அவர்­கிட்ட நாமா போறது, சாமி­கிட்ட போற­மா­தி­ரி­தான். சாமி நமக்கு நன்­மை­யைத் தரு­வார்னு நம்­பிப் போறோம்ல, அது­மா­திரி அவர்­கிட்­ட­யும் நாம நம்­பிப் போக­லாம்; நல்ல பாடல்­கள் நிச்­ச­யம் கிடைக்­கும்.
இப்ப எடுக்­கிற படங்­கள்ல எல்­லாம், ‘கம்­போ­ஸிங்­குக்கு ஒரு வாரம் ஆச்சு, ஒரு மாசம் ஆச்சு. பாடல் கம்­போ­ஸிங்­குக்­காக ஆஸ்­தி­ரே­லியா போறோம், ஆப்­பி­ரிக்கா போறோம்’னு சொல்­றாங்க. எனக்கு அவ்­வ­ளவு நாள் எல்­லாம் ஆகல, இரண்டு படத்­துக்­கும் அவ­ரோட ஸ்டுடி­யோ­வி­லேயே அதி­க­பட்­சமா ரெண்டு நாட்­கள்ல எல்லா பாடல்­க­ளுக்­குமே மியூ­சிக் போட்­டுக் கொடுத்­துட்­டார். இளை­ய­ராஜா சார் கிட்ட டைரக்­ட­ரோட கற்­ப­னைக்­கேற்ற பாடல்­கள் கிடைச்­சி­டும். நாம நம்பி உட்­கா­ர­லாம். படத்­துல ஒரு காட்­சியை நாம எடுக்­கு­றோம்னா, அதுக்கு உயிரு கொடுக்­கிற விஷ­யம்­தான் இசை. இளை­ய­ராஜா சாரைப் பொறுத்­த­வரை, நமக்கு அது உடனே கிடைச்­சு­டும்.
இளை­ய­ராஜா சாரோட பாடல்­களை நாம எல்­லோ­ருமே இளம் வய­துல இருந்து கேட்டே வளர்ந்து வந்­தி­ருப்­போம். அந்த ஆசை­யி­லேயே இந்­தத் துறையை தேர்ந்­தெ­டுத்­த­வன் நான். எங்க ஊர்ல எந்த திரு­விழா நடந்­தா­லும் இளை­ய­ரா­ஜா­வோட பாடல்­க­ளைப் போட்­டுக் கேட்­டுக்­கிட்டே இருப்­போம். எம்.எஸ்.விக்கு அப்­பு­றம் மக்­களை கவர்ந்­த­வர். அவர்­கூட உட்­கார்ந்து கம்­போஸ் பண்­ணி­னேன் என்­பதே, எனக்கு வாழ்க்­கை­யில கிடைச்ச வரம். கையில ஒரு கீ போர்டை வச்­சி­ருக்­கி­ற­வங்க எல்­லோ­ருமே இசை­ய­மைப்­பா­ளரா உரு­வா­கிட முடி­யாது. வரம் கிடைத்­த­வர்­கள் மட்­டுமே இசை­ய­மைப்­பா­ள­ராக முடி­யும். இதுல ஞானம், வரம் என அனைத்­தை­யும் முழு­மையா பெற்­ற­வர், இசை­ஞானி இளை­ய­ராஜா. அவ­ரோட உட்­கார்ந்து ஒரு பாடல் கம்­போஸ் பண்­றோம் என்­பதே எங்­க­ளுக்­கெல்­லாம் பெரிய பாக்­கி­யம்’ என்று சிலிர்க்­கி­றார் சேரன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...