Wednesday, January 31, 2018

கடவுள் இருக்கிறாரா..???

"கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை?'' சீடன் கேட்டான்.
குரு ஒரு கதை சொன்னார்:
"கடவுள் இருக்கிறார்" என்று நம்பிய ஒரு மனிதன் மெல்ல சொன்னான்,
'கடவுளே...!!! என்னோடு பேசுங்களேன்....!!!'
அப்போது குயில் ஒன்று பாடியது.
அதைக் காதில் வாங்காத அவன், உரத்த குரலில் கத்தினான்:
'கடவுளே, என்னோடு பேசுங்களேன்..!?!'
உடனே உரத்த இடியோசை, எழுந்தது
அதையும் பொருட்படுத்தாத அவன்,
'பேசாவிட்டாலும், உன் தரிசனமாவது தரக்கூடாதா..???' என்று இறைவனிடம் கேட்டான்.
சுடர்விட்டுப் பிரகாசித்த படி,
வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது
அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்:
'ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா..???'
கடவுள் மெல்ல கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார்
அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியைகைகளால் தட்டிவிட்டு,
நடந்தபடி சொன்னான்.
'கடவுள் இல்லை..!!!
இருந்திருந்தால்என்னோடு பேசி இருக்கலாம்
பார்க்க முடிந்திருக்கும்
அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே..!!!''
கதையைக் கேட்ட சீடன் சொன்னான்
"புரிந்தது குருவே..!!!
கடவுள், தான் இருப்பதை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்
நாம் தான் புரிந்து கொள்வதில்லை..!!!''
என்றான்
உண்மை தானே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...