Friday, January 26, 2018

பைரவரின் நாய்க்கு என்ன பெயர் ?

நம் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ஜிம்மி, டாமி என்று பெயர் வைக்கிறோம் இல்லையா! அதுபோல, பைரவரின் நாய்க்கும் சில பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. பைரவருக்கு நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. நாய் எந்த ஒரு மோசமான உணவையும் தின்னும் பழக்கமுள்ளது.
நாம் செய்யும் படுமோசமான செயல்களால் ஏற்பட்ட பாவத்தைக் கூட, மனம் திருந்தி இவரை வணங்கி விட்டால் கழுவி விடுவார் என்பதன் அடையாளமே இது. காசியில் காவல் பணியில் இவர் இருப்பதால், காவல் பிராணியான நாயைக் கொண்டுள்ளார் என்பர். நாயை "வேதஞாளி' என்பர். இதை வேதத்தின் அடையாளமாகவும் கொள்வர். இந்த நாய்க்கு "சாரமேயன்' என்று பெயர் இருப்பதாக ரூப மண்டபம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...