Tuesday, January 30, 2018

வாழுகின்ற வார்த்தைகள். . *vs* வீழுகின்ற வார்த்தைகள்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு,
"நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் " என்கிறார்..
"எவ்வளவு காலம் டாக்டர், நான் சாகும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?" என்று கேட்கிறார் அந்த பெண்மணி
டாக்டர் கூறுகிறார், "நீங்கள் வாழும் வரை" என்று..
*சாகும் வரை, வாழும் வரை* என்ற இருவாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால் *சாகும் வரை* என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் *எதிர்மறை எண்ணம்* எழுகிறது. ஆனால் *வாழும் வரை* என்ற சொற்களில் ஆறுதல் தரும் *நேர்மறை எண்ணம்* ஏற்படுகிறது.
சொற்களில் என்ன இருக்கிறது, அது புரிந்து கொள்வதில் தானே இருக்கிறது, என்றுU வாதாடலாம். ஆனால்....
சில வார்த்தைகள் ரணப்படுத்தும்...
சில வார்த்தைகள் குணப்படுத்தும்...
அடுத்தவரை "ஊக்குவிக்கும்" வார்த்தைகளாக பேசலாம்.
அடுத்தவரை "சோர்ந்துபோகச் செய்யும்" வார்த்தைகளை தவிர்க்கலாம்.
*Every word has its power choose them carefully.*
உடலுக்கு *#Insulin* எவ்வளவு முக்கியமோ,
மனதுக்கு *#இன்சொலும்* அவ்வளவு முக்கியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...