Monday, January 22, 2018

திமிங்கிலத்துக்கும் ஒன்னும் புரியல...

ஒரு முயல் குட்டிக்கு தன்னோட பலத்தை நிரூபிக்கணும்னு ஆசை.. நேரா ஒரு யானைகிட்ட போச்சு... "வரியா... ரெண்டு பெரும் மோதி பார்த்துக்கலாம்"ன்னுச்சு...யானைக்கு ஒரே கோவம்...
"போறியா இல்ல அப்டியே மிதிச்சு கொல்லவா..?"
"சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்... இந்த கயிறை இழுத்து ரெண்டுபேர்ல யார் பலசாலின்னு பார்த்துக்கலாம்... புடி..." அப்டின்னுச்சு... யானையும் யோசிச்சிட்டு சரின்னு ஓத்துக்கிட்டு கயிறை பிடிச்சுகிச்சு.... இன்னொரு முனையை கைல எடுத்துக்கிட்டா முயல், "நான் இந்த கயிறை ஆட்டி சிக்னல் கொடுத்ததும் நீ இழுக்க ஆரம்பிச்சுடு"ன்னு சொல்லிட்டு அடுத்த முனையை எடுத்திட்டு அந்த பக்கமா கடல்ல இருந்த திமிங்கிலத்துக்கிட்ட போய் அதே போல சொல்லிச்சு.. திமிங்கிலமும் மொதல்ல கோபப்பட்டாலும் சரின்னு ஓத்துக்கிட்டு கயிறை வாயில கவ்விக்கிச்சு...
இந்த முயல் கயிறை ஆட்டி விட்டுட்டு ஓடிப்போய் ஒரு புதருக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு வேடிக்கை பார்த்திச்சு .. யானையும் திங்கிலமும் ஒன்னை ஒன்னு மிஞ்சாம மாறி மாறி இழுத்திகிட்டு இருந்துச்சுங்க.... ரெண்டு பேருமே சளைக்கல... ஒரு கட்டத்தில் ரெண்டுபேரோட பலத்தையும் தாங்க முடியாம கயிறு நடுவில அறுந்து போச்சு....
உடனே முயல் வேகமா யானைகிட்ட போய், "பார்த்தியா.. நானும் உனக்கு சமமான பலம் உள்ளவன் தான்" அப்டின்னு பெருமை பேசிட்டு அடுத்து திமிங்கிலத்துக்கிட்டயும் போய் அதே போல சொல்லி பெருமை பட்டுக்கிச்சு...
யானைக்கும் ஒன்னும் புரியல... திமிங்கிலத்துக்கும் ஒன்னும் புரியல... இந்த குட்டி முயல் நமக்கு சமமான பலம் பொருந்தியதா இருக்குதேன்னு ரெண்டுமே அந்த முயலை பார்த்து பயப்பட ஆரம்பிச்சிடுச்சு....
யானைக்கும் திமிங்கிலத்துக்கும் தான் என்ன நடந்ததுன்னு புரியல.. #TTVதினகரனுக்குமா புரியாம போய்டும்..
அந்த முயல்குட்டியே அவருதான....
Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...