Friday, January 19, 2018

*#அழகான வரிகள்#*

*தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும்*
*மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!*
👌👌👌👌👌👌👌
*நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை*
*அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!*
👌👌👌👌👌👌👌👌
*'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது*
*உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை*
👌👌👌👌👌👌👌👌
*நோய் வரும் வரை உண்பவன்,*
*உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!*
👌👌👌👌👌👌👌👌
*பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல*
*ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!*
👌👌👌👌👌👌👌👌
*பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....!*
*உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!*
👌👌👌👌👌👌👌👌
*பிச்சை போடுவது கூட சுயநலமே...*
*புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...*
👌👌👌👌👌👌👌👌
*அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை*
*ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.*
👌👌👌👌👌👌👌👌
*வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு*
*அதற்கு அவமானம் தெரியாது*
*விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!*
👌👌👌👌👌👌👌👌
*வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".*
*வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"*
👌👌👌👌👌👌👌👌
*திருமணம் -*
*ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்*
*ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!*
👌👌👌👌👌👌👌👌
*முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்*
*பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்*
*அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.*
👌👌👌👌👌👌👌👌

*மீண்டும் ஒரு முறை* *முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்*
*என்ற ஒரு காரணத்திற்காகவே*
*நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன*
👌👌👌👌👌👌👌👌

*நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.*
👌👌👌👌👌👌👌👌

*இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட*
*வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!*
👌👌👌👌👌👌👌
*பகலில் தூக்கம் வந்தால்,*
*உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!*
*இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!*
👌👌👌👌👌👌👌👌
*துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது*
*கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..*
👌👌👌👌👌👌👌
*தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது*
👌👌👌👌👌👌👌

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...