Monday, January 15, 2018

வரலாற்றில் பதியவேண்டியவை தான்.

'நான் கடவுள்' படத்திற்கான பூஜையின் போது, நிருபர் இயக்குனர் பாலாவிடம் "இந்த படத்திற்கும் இசை இளையராஜா தானா ? என்று கேட்க... சற்றும் தாமதிக்காமல் பாலா சொன்னது... "என் படத்திற்கு அவரை விட்டால் யாரால் இசையமைக்க முடியும்".
'நான் கடவுள்' படத்தில் நடந்த சுவாரசியமுன் ஒன்று உண்டு, ராஜாவின் இசையாகட்டும், அல்லது பாடலாகட்டும் வரலாற்றில் பதியவேண்டியவை தான்.
'நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற "பிச்சை பாத்திரம்" பாடலுக்கு கூடுதலாக ஒரு சிறப்பு உண்டென்றால், இந்த பாடலை எழுதியவர் நம் ராஜாதான், ஆனால் இந்த வரிகள் இந்த
படத்திற்கு தான் எழுதப்பட்டதா ? என்ற கேள்வி எழுமேயானால், நிச்சயமாக இந்த படத்திற்கு எழுதப்பட்ட பாடல் அல்ல, பல வருடங்களுக்கு முன்பு ராஜாவின் பக்தி பாடலாக வந்த "ரமணமாலை" ஆல்பத்திற்காக எழுதப்பட்டது தான் இந்த பாடல்.
பாலா கேட்டுக்கொண்டதற்காக இசையில் சில மாற்றங்களை செய்து வெளிவந்தது இப்பாடல். உயிரில் இசையை ஊற்றி, இதயத்தை பிழிந்து கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது என்ற
சிறப்பும் இந்த பாடலுக்கு உண்டு...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...