Thursday, January 25, 2018

இளையராஜாவுக்கு வாழ்த்துக்களோடு நன்றி-

இந்த ஆண்டின் பத்ம விபூஷன் விருது ராஜா சாருக்கு வழங்கப்பட்டுள்ளது.. இந்தியாவில்பாரத ரத்னா விருதுவுக்கு பிறகு அடுத்த உயர்ந்த விருது
பத்ம விபூஷண் விருது தான்.
பத்மவிபூஷண் விருதுக்காக இளைய ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய செய்தித் தொடர்பு துறையில் இருந்து அறிவிப்பு சென்று இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? எனக் கேட்டுள்ளனர் அதற்கு ராஜா சார் , நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன தும் நீங்கள் ஒப்புக் கொள்வதால் இந்த விருது பெருமை கொள்கிறது என மத்திய செய்தி தொடர்பு துறை இளயராஜாவிடம் தெரிவித்துள்ளது.
அதோடு இளையராஜா கூறியதைக்கேட்டால் இன்னும் சூப்பராக இருக்கிறது. மோடி தலைமை யிலான மத்திய அரசால் வழங்கப்படும் இந்த விருது, தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் கௌரவிப்ப தாக நினைக்கிறேன் "என்று கூறியுள்ளார்.
இந்த பெருமிதத்திற்க்காகவே உங்களுக்கு நன்றி ராஜா சார்..
இது தாங்க பண்பாட்டின் உச்சம் என்றே சொல்ல லாம்.உலகின் உயரிய ஆஸ்கார் விருதுவுக்கே தகுதி
யான ராஜாசார் இந்தியாவின் இரண்டாவது பெரிய
விருதான பத்மவிபூஷன் பெற இவ்வளவு காலம்
காத்திருக்க வேண்டி இருந்ததை நினைத்தால்
மனசு வலிக்குது.
கடந்த ஆண்டு வரை 300 பேருக்க வரை வழங்க ப்பட்டு வந்த இந்த பத்ம விபூஷன்விருது்இந்த ஆண் டில் இளைய ராஜாவோடு குலாம் முஸ்தபா கான் என்கிற இந்துஸ்தானி இசை கலைஞருக்கும் கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தா கேந்திராவின் தலைவர் பரமேஷ்வருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது..
இந்த வருடமாவது பரவாயில்லை. கடந்த ஆண்டு பத்மவிபூஷன் விருது வாங்கியவர்களின் லிஷ்டை
பார்த்தால் சிரிப்பு தான் வரும். சரத்பவார் முரளி
மனோகர் ஜோஷி போன்றவர்களுக்கு அரசியலில்
சாதனை நிகழ்த்தியவரகள் என்கிற அடிப்படையில்
வழங்கப்பட்டு இருந்தது
பொதுவாகவே இந்தியா வில் விருது கள் என்பது சாதனையை மையப்படுத்தி அளிக்கப்படாமல் அரசியலை முன் வைத்தே அளிக்கப் படுகிறது
என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
ராஜீவ் காந்தி என்ன சாதனை செய்தார் என்று அவருக்கு பாரத்ரத்னா விருது அளிக்கப்பட்ட து
எம்ஜியாருக்கு எதற்காக பாரதரத்னா அளிக்கப் பட.டது?அம்பேத்காருக்கு எதற்காக காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை பாரத் ரத்னா விருது கிடைக்க வில்லை என்று காரணம் தேடினால்
.அதற்கு விடை அரசியல் என்றே பதில் வரும்..
ராஜாஜி நேரு இந்திரா சாஸ்திரி ராஜீவ் காமராஜர் சிசுப்ரமணியன் விவி கிரி ராஜேந்திர பிரசாத் ஜாகிர் உசேன் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கே காங்கிரஸ் ஆட்சி பாரத் ரத்னா விருதுவழங்கி பெருமைப்பட்டு கொண்டது.தெரிந்த பேர்கள் தான் இவை.அரசியலில் அட்ரஸ் இல்லாத நிறைய காங்கிரஸ் தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி
பாரத் ரத்னா விருது வழங்கியது..
ஆனால் இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்காரை காங்கிரஸ் கட்சி கடைசி வரை கண்டு கொள்ளவே இல்லை என்பதில் இருந்து
இந்தியாவில் விருதுகள்.எப்படி வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்..
நம்முடைய இளைய ராஜாவுக்கு எத்தனையோ வருசத்திற்கு முன்பே நாம் இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத்ரத்னா வழங்கி கவுரவித்து இருக்க
வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ள வே இல்லை.ரவிசங்கர் லதாமங்கேஷ்கர் பிஸ்மி ல்லாகான் பீம்சென் ஜோஷி போன்ற பாரத் ரத்னா விருது பெற்றவர்வர்களை விடஇசைத்துறை யில் இளையராஜா நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.
அதனால் மோடி அரசு பத்மவிபூஷன் விருதோடு நின்று விடாமல் பாரத்ரத்னா விருதுப் வழங்கி இளைய ராஜாவை கவுரவிக்க வேண்டும்.. மோடி ஆட்சியில் இது நிச்சயம் நடை பெறும் என்று உறுதி
யாக நம்பலாம்.
Image may contain: one or more people and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...