Tuesday, January 23, 2018

மத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடு விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி.

மத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடு விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி

மத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடு விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி
இன்று காலை, மத்திய அரசுக்கு மூன்று மாத காலம் கெடு விதித்து உச்ச‍ நீதிமன்றம் (Supreme Court fix Three Month Dead Line) அதிரடியாக
உத்த‍ரவிட்டுள்ள‍து. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை (Ex-Prime Minister Rajiv Gandhi Murder) வழக்கில் ஆயுள் சிறை தண்டனை (Life Imprisonment Punishment) பெற்றுள்ள முருகன் (Murugan), பேரறிவாளன் (Perarivalan), சாந்தன் (Sandhan), நளினி (Nalini), ஜெயக்குமார் (Jayakumar), ராபர்ட் பயாஸ் (Robert Boyas), ரவிச்சந்திரன் (Ravi chandran) ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறு த்தி வருகின்றன.
 
இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய அரசு(Central Government)க்கு 2016-ம் ஆண்டு தமிழக அரசு (Tamil Nadu Government) கடிதம் எழுதியது. ஆனால், மத்திய அரசு (Central Government) இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
 
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...