Tuesday, January 23, 2018

அறிஞனைக் கேட்காதீர்கள், அனுபவசாலியைக் கேளுங்கள் ...

நமக்கு முன்பு இருந்த சாதனையாளர்களும்,
நம் காலத்திய சாதனையாளர்களும் கூறிய அடிப்படைக் கருத்து என்னவெனில்,
"நீ எங்கே நிற்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்குப் பதிலாக,
எங்கே செல்ல வேண்டும் என்று முடிவு செய்துகொள்.
பின்னர் விடாமுயற்சியில் ஈடுபடும் உன்னுடைய கேள்விகளுக்கெல்லாம் அப்போது விடை கிடைக்கும் " என்பதாகும்.
No automatic alt text available.
நம்மால் இயலுமா? என்று
கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பவன்,
தான் நின்று கொண்டிருக்கும் இடத்தை விட்டு ஓர் அங்குலம் கூட நகர முடியும்.
"எதுவுமே முடியும் " என்று
துணிச்சல் கொள்பவனே பயணத்தில் முந்துபவனாக இருப்பான்.
நம்மிடம் உள்ள திறமைகளை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதனால்தான்,
முடியுமா? முடியாதா? என்று
கேள்வி நமக்குள் பிறக்கிறது.
அந்த கேள்விக்கு விடை தேடுவதிலேயே நாம் நேரத்தைச் செலவிடுவது மட்டுமல்ல
நமக்குள்ள திறமையைப் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு
நாம் தள்ளப்பட்டு விடுகிறோம்.
இதனால்,
நம்மைத் தேடி சிறிய வாய்ப்புகள் வந்தால் கூட அவற்றைப் பயன்படுத்த தயங்குகிறோம்.
அல்லது
தவறாகப் பயன்படுத்தி
தோல்வியைச் சந்தித்துப் பின்னர் துவண்டு போகிறோம்.
நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று எதிர்மறையாக நாம் சிந்திப்பதைவிட,
நம்மால் முடிந்ததைக் கட்டாயம் செய்யவேண்டும் என்ற மனநிலையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சும்மா இருப்பதே சுகம் என்று
எண்ணிக் கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டும் என்பதற்காக,
இந்த மண்ணில் எந்தவொரு ஜீவராசியும் படைக்கப்படவில்லை.
இயற்கையின் ஒரு பகுதியாகிய மனிதன் ,
தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தனது உடல் உறுப்புக்களைப் பயன்படுத்தி
உழைப்பில் ஈடுபட்டே தீர வேண்டும் என்ற கட்டாய விதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.
உழைப்பினால் மனிதனுக்கு
எந்தக் கேடும் வருவதில்லை. மாறாக உயர்வுதான் வரும்.
ஆனால்,உழைக்காத ஜீவன்கள் எதுவாக இருந்தபோதிலும்
அவை வெகு விரைவில் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போகும்.
எனவே,
உழைப்பின் அருமை பெருமையை அறிந்தவர்கள் ஒரு கணமும் வெறுமனே இருக்க மாட்டார்கள்.
ஏதாவதொன்றைச் செய்து கொண்டே இருப்பார்கள்.
சிலருக்கு வேலை செய்யாவிட்டால் பைத்தியம் பிடித்ததுபோலாகிவிடும்.
எனவேதான் சான்றோர்கள் இவ்வாறு சொல்லிச் சென்றுள்ளனர்.
"பிறர் உயர்ந்து நிற்பதைப் பார்த்து,
நீ பிரமிப்பு அடைந்து, நம்மால் இயலாது" என்ற மனநிலைக்கு ஆளாகி விடாதே.
அவர்கள் உயர்ந்து நிற்பதற்கான காரணம் என்ன என்று யோசித்துப்பார்.
அப்போது,
முடியும் என்ற நம்பிக்கை உன் உள்ளத்தில் பிறக்கும் " என்று கூறியுள்ளனர்.
இக்கருத்தை நாம் கூர்ந்து கவனித்து அதனைப் பின்பற்றினால்,
நாம் முந்தவும் செய்யலாம் .
அதைத் தொடர்ந்து முன்னேறவும் செய்யலாம் .
ஒரு வருடம் என்பது
நம் வாழ்க்கையைப் பலவிதங்களில் மாற்றும்.
காலத்தின் சக்கரங்கள்
யாருக்காகவும் நிற்பதில்லை!!
பணிவான அன்புடன்
காலை வணக்கங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...