Monday, January 15, 2018

எங்கே #செல்லும் #இந்தப் #பாதை???

காங்கிரஸின் தமிழக தலைவர்கள்தான் கிளிப்பிள்ளைகள்போல தலைவர் அரசரில் ஆரம்பித்து ஈவிகேஎஸ் தங்கபாலு கிருஷ்ணசாமி பீட்டர் அல்போன்ஸ் கோபண்ணா என எவர் மைக் அருகில் சென்றாலும் சவுண்ட் சர்வீஸ் காரர் மைக் டெஸ்டிங் சொல்வது போல ஸ்டாலின் அடுத்த முதல்வர் தளபதி அடுத்த முதல்வர் என வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரிய கட்சியான காங்கிரஸே பல்லக்கு தூக்கும் போது நமக்கேன் பிரச்சனை ஒன்று இரண்டு எம்எல்ஏக்கள் கிடைப்பதையும் நாம் ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற பயத்தில் மதச்சார்பற்ற அணிசேர ஆசைப்படும் மற்ற பங்காளிகளும் பம்முகிறார்கள்.
அவர்களும் பொலிட்டிக்கல் கம்பெல்சனுக்காக தமிழக மக்களின் கிரவுன்ட் ரியாலிட்டி தெரிந்தும் கூட வேறு வழியில்லாமல் ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என சொல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாகிறார்கள்...
அதே நேரத்தில் திமுகவில் உள்ள அறிவுஜீவிகள் என அறியப்பட்டவர்கள் ஸ்டாலின் முதல்வராகிவிடக்கூடாது என நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் தோன்றுவது நியாயமாகப்படுகிறது.
ஏனெனில் வாக்காளர்களில் 80%பேர் ஹிந்துக்கள்.
அதிலும் இப்போது முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மதப்பெருமையை சொல்லி கூட்டம் சேர்க்கும் கும்பல்கள் இஷ்ட்டத்திற்கு பெருகி நெளிகிறது.
அதில் உழைக்காமலே பெரும் செல்வம் சேர்ப்பது பேஷனாகிவிட்டது.
நாடு இருக்கும் சூழலில் எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்று மக்களும் எல்லாவித துண்பத்திற்கும் வழிபாடும் பரிகாரமும் தீர்வு என மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இப்படி யதார்த்தகளம் இருக்கையில் திமுகவின் முக்கியஸ்த்தர்களாக விளங்கும்
வைரமுத்து கனிமொழி அன்பழகன் இன்னபிற இரண்டும் கெட்டான்கள் நாலைந்து பேர் வரிசையாக திருப்பதி ஏழுமலையானில் ஆரம்பித்து ஆண்டாள் ஆரியன் குடுமி சாம்பல் நாமம் என விவரம் கெட்டதனமாக பேசி
பெருவாரியான மக்களின் முகச்சுழிப்புக்கு ஆளாகி திமுகவே இப்படித்தான் இவர்கள் ஹிந்து விரோதிகள் என்ற பழைய லேபிளை அவசியமில்லாமல் புது பெவிக்கால் போட்டு ஒட்டிக்கொள்கிறார்கள்.
நேற்று சென்னை புத்தகக்கண்காட்சியில்
திமுக மாநில பேச்சாளர் .....பிரசன்னாவின் .....ஹிந்து விரோத பேச்சினால் விரட்டியடிக்கப்பட்டார்.(இன்று 2018 ஜன_15)..இது இன்றைய செய்தி.
சென்னையில் தற்போது நடைபெற்று வரும் 10வது புத்தகக் கண்காட்சியில்
திருவள்ளுவர் அரங்கில் எமரால்டு பதிப்பகத்தின் ஒளிவண்ணன் திமுகவின் சமீபகால புதுப் பேச்சாளர்
பிரசன்னாவின் உரைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரசன்னா தமிழக மக்கள் தேவாரம் ,திருவாசகம்,
திவ்வியப் பிரபந்தம் .ஆகிய குப்பைகளைப் படிக்கிறார்கள் என்று கீழ்த்தரமாகப் பேசினார்
RSS BJP போன்றவை தீவிரவாத ஹிந்து இயக்கங்களை திட்டுவதாக நினைத்துக்கொண்டு அவரிஷ்ட்டத்திற்கு உருவவழிபாடு ராமஜென்மபூமி என்றெல்லாம் ஏகஸ்தாயியில் எகத்தாளமாகப் எள்ளி நகைத்து பேசினார்
இதைக் கேட்ட தொண்டர்களும் இந்து உணர்வாளர்களும் பிரசன்னாவின் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தமிட்டனர்
இந்துக்களின் உணர்ச்சிப் பெருக்கைக் கண்ட புத்தகக் கண்காட்சி அமைப்பின் தலைவர் பைரவன் மற்றும் நிர்வாகிகள்
பிரசன்னாவின் பேச்சைக் கண்டித்துஅவர் உரையை உடனே நிறுத்தி அவரை அமர்த்தினர்.
பிரசன்னாவை அமரவைத்த அனைத்துத் தமிழக புத்தக வாசிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கும் நன்றி.
அனைத்து மதமக்களும் கூடும் ஒரு பொதுவான நிகழ்ச்சியில் இப்படி இழிவாகப் பேசிய பிரசன்னா வின் பேச்சைக் கண்டிக்காதவர்களே அந்த அரங்கத்திலில்லை.
இவர்கள் நோக்கம் ஹிந்து வாக்குக்களை திமுகவிற்கு எதிராக திருப்பி ஸ்டாலின் முதல்வராக வராமல் பார்த்துக்கொள்வதாக இருக்குமோ??
யாரோ யாரோ அறிவாரோ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...