Saturday, January 20, 2018

யாருக்குத் தோல்வி? புரியலை!

கனிமொழி அவர்கள் கூற்று - ஏழுமலையானுக்கு நேர் எதிரே இருக்கும் உண்டியலுக்குக் காவல் காக்கப் போலீஸ் எதற்காக? தன் உண்டியலையே காத்துக் கொள்ள முடியாத அந்த ஏழுமலையானா, உங்களை எல்லாம் காப்பாற்றப் போகிறார்?- அருமையான கேள்வி அம்மையாரே.......
2006 ஆம் ஆண்டு ..... சட்டப்பேரவைத் தேர்தல் ... தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் பாதுகாக்க உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க..... கலைஞரை முதல்வராக்குங்கள் - என முழங்கினீர்கள். நாங்களும் ஓட்டுப் போட்டுக் கலைஞரை எங்களையெல்லாம் காக்கும் முதல்வராக்கினோம். ஒரு நாள் சென்னை சென்றிருந்த போது, சுமார் நூறு போலீஸார் சூழ, கலைஞர் வந்து கொண்டிருந்தார். நான் அருகிலிருந்தவரிடம் - எதுக்குங்க இவ்வளவு போலீஸ் கூட்டம் என்றேன். உடனே அவர் - எலே மாக்காய்ங், இது அவரோட பாதுகாப்புக்காக. அதாவது அவரைக் காக்கும் காவலர்கள் என்றார். தங்கச்சி அப்போதான் எனக்குச் சுரீர் என்றது. தேர்தல் சமயம், தமிழகத்தையும் , தமிழனையும் காப்பாத்தற ஒரே சக்தி கலைஞர் தான்னு ஓட்டுக் கேட்டீங்க... நாங்களும் நம்பி ஓட்டுப் போட்டோம். இப்பப் பார்த்தால் இவரைப் பாதுகாக்க வே இம்பூட்டுப் போலீஸா? அப்புறம் இவரு எப்படி நம்மளைக் காப்பாத்து வாரு? என் சந்தேகம் சரிதானே, தங்கச்சி. தயவு செய்து உனக்குத் தெரியலைன்னாலும், உங்க நயினா கிட்ட கேட்டுச் சொல்லேன்.. ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...