நாம் செய்யக்கூடிய சின்ன திருஷ்டி பரிகாரமாக இருந்தாலும் அதை மனப்பூர்வமாக நம்பி செய்தால் தான் அதன் மூலம் பல மடங்கு பலன் கிடைக்கும். உப்பு சுற்றி திருஷ்டி கழிப்பது, மிளகாய் சுற்றி திருஷ்டி கழிப்பது, கற்பூரம் சுற்றி திருஷ்டி கழிப்பது, போல ஒரு சிறிய திஷ்டி கழிக்கும் பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த முறையில் நீங்கள் திருஷ்டியை கழிக்கும்போது உங்களுடைய உடம்பை பிடித்திருக்கும் நோய்நொடி விலகும். உடம்பை பிடித்த பீடை விளங்கும். உடம்பில் இருக்கும் சோம்பேறித்தனம் விலகி உடல் சுறுசுறுப்பாகி, ஆரோக்கியம் பெறும். நிறைய நன்மைகளை கொடுக்கக்கூடிய பரிகாரம் இது. இந்த பரிகாரத்தை முறைப்படி எப்படி செய்யலாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான ஒரே ஒரு பொருள் கோதுமை. ரேஷன்கடையிலிருந்து வாங்கிய கோதுமை இருந்தால் கூட போதும். யாருக்கு பிரச்சினை இருக்கிறதோ, உடல் சோர்வு, தீராத நோய், தினமும் மருந்து மாத்திரை சாப்பிட்டு உடல் நிலை தேறாதவர்கள், சோர்ந்து சோர்ந்து போய் உட்காருபவர்கள், ஏதோ பேய் அடைந்தது போல சோகமாகவே இருப்பவர்கள், என்று யாருக்கு வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பாதிக்கப்பட்டவரை கிழக்கு பார்த்தவாறு அமர வைத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு சொம்பு நிறைய தண்ணீரை எடுத்து அவருடைய தலையை ஏழுமுறை சுற்ற வேண்டும். (வலது புறமாகவே சுற்றினால் போதும். அதாவது ஆங்கிலத்தில் கிளாக்வைஸ் சொல்வார்கள் அல்லவா. அப்படி 7 முறை சுற்றுங்கள்.) அதன் பின்பு அந்த சொம்பு தண்ணீரை கீழே வைத்துவிட்டு, உங்கள் கையில் ஒரு கைப்பிடி அளவு கோதுமையை எடுத்து அவருடைய தலையை கிளாக் வைஸ் ஏழுமுறை சுற்றி, அந்த கோதுமையை பசு மாட்டிற்கு போட்டு விடலாம். அப்படி இல்லை என்றால் காக்கை குருவிகளுக்கு சாப்பிட வைத்து விடலாம். தலையை சுற்றிய சொம்பு தண்ணீரை மரம் செடி கொடிகளுக்கு ஊற்றி விடலாம். இதே போல தொடர்ந்து ஏழு நாட்கள் மேலே சொன்ன பரிகாரத்தை செய்யும் போது, ஒரு மனிதனுக்கு உடம்பில் இருக்கக்கூடிய பிணி பீடை விலகும் என்பது ஒரு நம்பிக்கை. முயற்சி செய்து பாருங்கள் இது ஒரு சுலபமான பரிகாரம் தான் ஆனால் நம்பிக்கையோடு செய்ய வேண்டும். இந்த தண்ணீரையும் கோதுமையையும் எடுத்து சுற்றும் போது சுற்றுபவர்கள் மனதில் அந்த நபருக்கு இருக்கக்கூடிய குறிப்பிட்ட அந்த கஷ்டங்கள் விலக வேண்டும் என்று சொல்லி சுற்ற வேண்டும். உங்களுக்கு சுற்றி போட யாரும் இல்லை என்றால் நீங்களே உங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்து கொண்டாலும் தவறு கிடையாது. மனப்பூர்வமாக நினைத்துக் கொள்ளுங்கள். உடம்பில் இருக்கும் பீடை விலக வேண்டும். உடம்பில் இருக்கும் நோய் நொடிகள் தீர வேண்டும். அப்படி இல்லை என்றால் உடம்பு வலி போக வேண்டும். இப்படி உங்களுக்கு என்ன தேவையோ உங்கள் உடம்பில் என்ன பிரச்சனை இருக்கிறதோ, அந்த பிரச்சனை விலக பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக ஏழு நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். ஏழு நாட்களுக்கு மேல் பலன் கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் பரிகாரத்தை தொடர வேண்டாம். நல்லது நடப்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment