ஜி 20 அமைப்புக்கு வரும் டிசம்பர் மாதம் இந்தியா தலைமை பதவியை ஏற்க உள்ளது. இதற்கான சின்னம், மையக்கருத்து மற்றும் இணைய தளத்தை பிரதமர் நரேந்திடிர மோடி நேற்று அறிமுகம் செய்தார். ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் மையக்கருத்து உருவாக்கப்பட்டு உள்ளது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: ஜி 20 சின்னம் உலக நல்லிணக்கத்தை எதிரொலிக்கிறது. டிசம்பர் மாதம் ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்கிறது. ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பதவி ஏற்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜி 20 அமைப்பின் சின்னம் சாதாரணமானது அல்ல. அது அனைவரின் உணர்வு. தற்போது ஜி20 அமைப்பை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. 75-வது தின சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, இந்தியா தலைமைப் பதவியை ஏற்றுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வளர்ச்சியை நோக்கி நமது பயணத்தைத் துவக்கினோம். கடந்த 75 ஆண்டுகளில் அனைத்து அரசுகளின் முயற்சியும் அடங்கும். அனைத்து அரசுகள், குடிமகன்கள், நாட்டின் வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் சென்றனர். சின்னமும், மையக்கருத்தும், நமது பாரம்பரியத்தை உணர்த்துகிறது. உலக அளவில் ஏற்பட்ட பிரச்சினையில் தலைமை பதவி இந்தியாவிடம் வந்துள்ளது. ஜி 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள்தான், உலகளவில் 85 சதவீத ஜிடிபிக்கு பங்களிப்பை அளிக்கிறது. இயற்கையும் வளர்ச்சியும் ஒன்றாக பயணிக்க முடியும். வளர்ச்சியில் அனைவரையும் இந்தியா முன்னெடுத்து செல்கிறது. உலகத்தின் 75 சதவீத வர்த்தகத்தை ஜி20 அமைப்பு முடிவு செய்கிறது. நமது பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே நோக்கம் என தெரிவித்தார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment