தமிழகம் வந்த பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். அதேபோல் ஓ.பன்னீர் செல்வமும் தமது ஆதரவாளர்களுடன் பிரதமரை வரவேற்றார். அதிமுகவின் இரு தலைவர்களும் ஒன்றாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதேபோல் பட்டமளிப்பு விழா நிறைவுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியிலும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இருவரும் அருகருகே நின்றபடி பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பிரதமரை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, ராஜன் செல்லப்பா, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், மதுரை மேயர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி சிரித்தப்படி பூங்கொத்துக் கொடுத்து வழி அனுப்புவதும், அருகில் ஓ.பன்னீர் செல்வம் சிரித்தபடி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. பிரதமருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை போலவே வழி அனுப்பும் நிகழ்ச்சியிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று இரவு சென்னை வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை, ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment