பணப் பிரச்சனையை வெகு தூரம் துரத்தி அடிக்க ஒரு சின்ன தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். எல்லோருக்கும் தான் பண பிரச்சினை இருக்கிறது. ஆகவே வரக்கூடிய பண பிரச்சனையை கண்டு யாரும் கஷ்டப்பட வேண்டாம். அடுத்த மாத செலவுக்கு என்ன செய்வது, அடுத்த வருட செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்காதீங்க. இன்னைக்கான செலவை சமாளிக்க என்ன வழி, வருமானத்தை தேட என்ன வழி, என்று ஓடிக்கொண்டே இருங்கள். நிச்சயமாக உங்கள் தேவைக்கு ஏற்ற பணத்தை அந்த கடவுள் கொடுத்துக் கொண்டே இருப்பான். இது எல்லாவற்றையும் விட வந்த பணத்தை செலவு செய்யும் போது கஷ்டத்தோடு செலவு பண்ணாதீங்க. மனக்கவலையோடு கஷ்டத்தோடு செய்யக்கூடிய எந்த நல்ல காரியமும் திரும்பவும் நம்மிடம் வராது. அதே போல தான் பணமும். சந்தோஷமாக செலவு செய்யும் போது செலவான பணம் கூட, மீண்டும் ஒரு சில நாட்களிலேயே நம் கைக்கு வந்துவிடும். இந்த ட்ரிக்க ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். சரி இப்போது பரிகாரத்திற்கு வந்து விடுவோம். கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். பல பரிகாரங்களை செய்வதற்கு இந்த கல்லுப்பை பயன்படுத்துகிறார்கள். இதே கல்லுப்பை தான் பணம் பிரச்சனை தீர்வதற்கு நாம் பயன்படுத்த போகின்றோம். புதியதாக பாக்கெட்டில் இருக்கும் கல் உப்பை எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள். ஒரு வெள்ளை நிறத்தில் இருக்கும் பட்டு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பட்டு துணியில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 3 ஏலக்காய்கள் இரண்டையும் ஒன்றாக வைத்து முடிச்சு போட்டு வீட்டின் ஈசானிய மூலையில் வைக்க வேண்டும். அதாவது வீட்டின் வடகிழக்கு மூலையில் இந்த முடிச்சை வைத்து விட வேண்டும். (முடிச்சை தயார் செய்யும் போது மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் மனமுருக வேண்ட வேண்டும்.) தினமும் சாமி கும்பிடும் போது குலதெய்வத்தை நினைத்து ஊதுவத்தி ஏத்துவீர்கள் அல்லவா. அதை கொண்டு வந்து இந்த முடிச்சுக்கும் காண்பியுங்கள் போதும். வடகிழக்கு மூலையெல்லாம் எங்களுக்கு தெரியாது என்றால் இந்த முடிச்சை எடுத்து பத்திரமாக பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். வேலை முடிந்தது. ஆனால் பீரோவுக்குள் இருக்கும் முடிச்சுக்கு ஊதுவத்தி தினமும் காண்பிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. ஏனென்றால் பீரோவுக்குள் இருக்கும் துணியில் நெருப்புப்பட்டுவிடும். ஆகவே அதை செய்யாதீங்க. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து ஏழு மணிக்குள் செய்யலாம். (கல்லுப்பு என்பது மகாலட்சுமியையும், ஏலக்காய் பெருமாளையும் குறிக்கிறது. இருவரையும் ஒரு சேர மகிழ்ச்சியோடு வைக்கும்போது நம் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்.) பரிகாரத்திற்கு பலன் இரட்டிப்பு மடங்காக உடனடியாக கிடைக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பண பிரச்சனைகள் சரியாகும். புதியதாக பலவிதமான பண பிரச்சனைகள் வராது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை முடிச்சிக்கு உள்ளே இருக்கும் பழைய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, புதிய பொருட்களை வைத்துக் கொள்ளலாம். இந்த எளிமையான தாந்திரீக பரிகாரம் உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment