Thursday, November 10, 2022

நல்லெண்ணெய் நல்லது .

 குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் தேய்த்து தலை குளிக்க வையுங்கள். அவசர உலகம், நவநாகரீகம், கல்லூரி மாணவர்கள், ஸ்டைல் ..... என்றெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்களைக் கூறாமல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாரம் இருமுறைகள் கட்டாயமாக தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, ஊறவைத்து குளிப்பதற்கு என்னெவெல்லாம் செய்யவேண்டும் அதையெல்லாம் செய்துபாருங்கள். செய்துவிடுங்கள். நிறைந்த கால்சியம் சத்தையும், புரதம், மக்னீசியம் போன்ற சத்துக்களையும் தன்னகத்தே வைத்துள்ள நல்லெண்ணெய் என்னும் எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தலையின் மேற்பாக தோளின்மூலம் முடியின் வேர்கால்கள்வரை எளிதில் ஊடுருவிச் செல்லும் தன்மையால், புறஊதாக்கதிர்களின் தீமையை அகற்றி, தலையின் வெப்பத்தை சமன்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்கிறது. உடல் வெப்பத்தையும் சீராக்குவதோடு, மனஅழுத்தம், கண்ணெரிச்சல், நீர் சுருக்கு உள்ளிட்ட சிறுநீர்ப்பாதை தொற்று, வயிற்றுவலி, மலச்சிக்கல் ஆகியவையும் உங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கிறது. முடியின் கருமை, அடர்த்தி, உறுதி, நீளம் ஆகியவை தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் எந்தஅளவிற்கு முடியின் வேர்கால்களைத்தொட்டு, உள்ளே செல்கிறதோ, அந்த அளவிற்கு நன்றாக அமையும். இதனுடன் சேர்ந்து, புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' 'சி' 'ஈ' மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்த பழங்கள், காய்கள், கொட்டை உணவுகள், கீரைகள், முட்டை ஆகியவையும் மிருதுவான, அடர்த்தியான, நீளமான, கருமையான கூந்தலுக்கு மிக அவசியம்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...