Thursday, May 12, 2011

ராசாவை மாட்டிவிட்ட கனிமொழி..கலைஞரின் கொள்கை சிரித்தது..!

ரஜினி உடல்நலமில்லாமல் (அஜீரண கோளாறு என்று சொல்கிறார்கள் )மருத்துவமனையில் இருக்கிறார்...எத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் இந்த மனுசர் யோசனை வந்துவிடுகிறது.விவரம் தெரிந்த நாள் முதலாக ஆதர்ச நாயகனாக மனதில் பழக்கி வைத்ததின் விளைவு இது.ரஜினி ஸ்டைல் செய்யும்போதெல்லாம் நானே செய்வது போலவே ஒரு கற்பனை குதிரை ஓட்டியிருக்கிறேன்...இன்று அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.இரண்டு நாட்கள் முழு ஓய்வு தேவைப்படுகிறது..அவர் மீண்டும் அதே காந்த சிரிப்புடன்,அதே மின்னல் வேகத்துடன் மீண்டும் ராணா வில் நடிக்க துவங்கிவிட்டார் என்ற செய்தியை படித்தால்தான் நிம்மதி உண்டாகும்....
---------------------------------------

கனிமொழி இன்று கோர்ட்டில் ஆஜரானார்...ராம்ஜெத்மலானி என்ற புகழ் பெற்ற வக்கீல் அவருக்காக வாதாடுகிறார்..அவர் வைத்த வாதம் தி.மு.க வின் கொள்கையை சிரிப்பாய் சிரிக்க வைத்துவிட்டது.ஸ்பெக்ட்ரம் ஊழலின் முழு சதிக்கும் காரணம் ஆ.ராசாதான்.இதில் கனிமொழிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்...அப்ப தகத்தாய சூரியன் ஆ.ராசா களங்கமற்றவர் என துதி பாடிய கலைஞரின் வாக்கு பொய்யானதா..?
ராசா தான் முழு சதிக்கும் காரணம் என தி.மு.க வினர் ஏற்பாடு செய்த வக்கீல் சொல்லும்போது,இந்த ஊழலை தி.மு.க ஒப்புக்கொண்டதாகத்தானே அர்த்தம்...?தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளர் ராசா,ஸ்பெக்ட்ரம் சதிக்கு முழு காரணகர்த்தா என ஒப்புக்கொண்டு தன் மகளை காப்பாற்ற துடிக்கும் கலைஞரின் தகப்பன் பாசத்தை ரசிக்கிறேன்.
-------------------------------------------------------------------------
அட்சய திருதியைக்கு நகை தான் வாங்க வேண்டும் என மக்கள் நகைக்கடைகளில் முண்டியடிப்பது வேடிக்கையாக இருக்கிறது..இதற்காக சில மாதங்களாக காத்திருந்து வாங்குகிறார்கள்...இதனால்தான் இவ்வளவு கூட்டம்.பணம் இருப்பவர்கள் வாங்குவது தவறில்லை..ஆனால் இதற்காக விளம்பரப்படுத்தும்போது ஏழைகளுக்கு ஏக்கம் உண்டாகிறதே..அதுதான் கவலை தருகிறது.

.தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும் என்றால் மனிதம் வாங்கினால்..?அன்பு வாங்கினால்..? இரக்கம் வாங்கினால்..? பெருகாதா...?
பசியுடன் இருக்கும் ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுங்கள் மனிதம் பெருகும்...உங்கள் தாய்,தந்தையருடன் மனம் விட்டு பேசுங்கள்.. அன்பு பெருகும்...புத்தகங்கள் வாங்குங்கள்...ஏழைக்குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் ,நோட்டு புத்தகம் கொடுத்து உதவுங்கள் அறிவு பெருகும்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...