Monday, May 30, 2011

தி.மு.க., தோற்றது யாரால்...

நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அலை வீச வில்லை.

தி.மு.க., வின் அதிருப்தியாளர்கள் அ.தி.மு.க., விற்கு வாக்களித்துள்ளனர்.

புள்ளிவிவரங்கள் படி அ.தி.மு.க.,கூட்டணி இத்தேர்தலில் பெற்ற வாக்குகள் 1,90,84,139

தி.மு.க., கூட்டணி பெற்ற வாக்குகள் 1,45,29,501 வாக்குகள்.

வாக்கு வித்தியாசம் சுமார் 45,00,000.

இந்த வித்தியாசமே அ.தி.மு/.க., கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றியும்..தி.மு.க., கூட்டணிக்கு 172 தொகுதிகளில் தோல்வியையும் தந்துள்ளது.

இந்த 45,00,000 வாக்காளர்கள் யார்...

எந்த ஒரு கட்சியையும் சேராத பொதுவானவர்கள்..ஐந்தாண்டுகள் ஆட்சியை மனதில் கொண்டு, பொறுமையுடன் இருந்து..தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இம்முறை..ஊழல்,குடும்ப ஆட்சியைத் தவிர்த்து..

பலருக்கு காங்கிரஸ் கட்சியின் மீது கோபம் இருந்தது..இலங்கை தமிழர்கள் பிரச்னையில்...அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்.

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது..வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்..

அதனால் தான் 63 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசால் 34லட்சத்திற்கு சற்று அதிகமான வாக்குகளே பெற முடிந்தது.

இந்நிலையில்..ஆட்சி மாற்றத்தைத் தீர்மானித்தவர்கள்...எக்கட்சியும் சாரா பொதுமக்கள்..

இவர்கள்தான் ஒவ்வொருமுறையும் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இங்கு வேறு ஒன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்..

தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகளில் சராசரியாக 42 விழுக்காடு வாக்குகள் வாங்கியுள்ளது.

ஆனால்..தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 35.6 விழுக்காடே வாக்குகள் வாங்கியுள்ளது.

ஏன் அப்படி?

தி.மு.க., வைக் கூட மன்னிக்கத் தயாராய் இருந்த மக்கள்..காங்கிரசை மன்னிக்க விரும்பவில்லை.தண்டிக்கவே விரும்பியுள்ளனர்.


மூக்கறுபட்ட காங்கிரஸ்...

தமிழ்நாட்டில்...நாங்கள் எந்த திராவிடக்கட்சியுடன் கூட்டணி வைக்கிறோமோ அவர்களே ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று..தனிப்பட்டமுறையில் தன்னால் ஏதும் முடியாவிடினும் , இப்படிச் சொல்வதில் மட்டும்..அனைத்து தமிழக கோஷ்டி காங்கிரஸ்காரர்களிடமும் ஒற்றுமை இருந்தது..

பலவேளைகளில் அது உண்மையோ..என சில அரசியல் தலைவர்களும் எண்ணியதுண்டு..

ஆனால்..இந்த முறை..

அந்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததாலேயே தி.மு.க., மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.

தி.மு.க., குடும்பக் கட்சியாகிவிட்டதும்..இலவசமாக அனைவருக்கும் டீ.வி.கொடுத்து..பாமரனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அறியவைத்ததும்...தி.மு.க., வின் ஹிமாலயத் தோல்விக்குக் காரணமாகிவிட்டன.

இப்போதும்..தில்லித் தலைவர்கள்..தோல்விக்கு ஊழல் மட்டுமே காரணமல்ல என்கின்றனர்..

எது எப்படியோ...தமிழகத்தில்..தி.முக., அ.தி.முக., என இரு கட்சிகளைவிட்டால் மாற்று இல்லை.

அதன்படி அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்துள்ளது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் செய்த தவறுகளை உணர்ந்து...

தி.மு.க., விடம் மக்கள் என்ன குறையை உணர்ந்தார்கள் என அறிந்து..

தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து..

தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றாது..நல்லாட்சியை அ.தி.மு.க., இம்முறையேனும் தரும் என நம்புவோம்.

நம்பிக்கைதானே வாழ்க்கை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...