Saturday, May 28, 2011

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

கட்சியினரை உற்சாகப்படுத்த பிறந்தநாள் கொண்டாட்டமாம்..!!
ரோம் பற்றிஎரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் ..
நம் இனம் நாசக்காரர்கள் வைத்ததீயில் பற்றிஎரிந்தபோது
இவர்போட்ட நாடகம் நாடறியும் .


மெரீனா கடற்கரையில், தலைக்கு மனைவியும் காலுக்கு துணைவியும் துணைநிற்க.. பேரனும் பேத்தியும்.. பிச்சைக்கார அடிப்பொடிகளும் இணைநிற்க..
நம் இனத்தவரின் மூச்சுத்தீ சுடாதிருக்க இரண்டு குளிரூட்டிகள் புடைசூழ டாக்டர் சொன்ன டயல்கொன்ட்ரோல் மாதிரி அரங்கேறியது இவரின் உண்ணாவிரத நாடகம்.

உயிர்ப்பலி கொடுத்தும் வராத அமைதி இவர் உண்ணாவிரதத்துல வந்துடிச்சாம்.
நம்பி இனிப்பு கொடுத்து கொண்டாடினவங்க வாய்ல போட்ட இனிப்பு தொண்டைய தாண்டறதுக்குள்ள ஆயிரம் உயிர்கள் பலி ஈழத்திலே.
எத்தனை பெண்கள் மானமிழந்து கதறினார்கள் ?
அப்போது வராத கண்ணீர், பெற்றமகள் ஊழலில் சிக்கி திஹார்ல அடைபட்டா
ஆறாப்பெருகி வரும். எப்படித்தான் முடிகிறது இவரால் ?
சொந்த ஊர்க்காரன் என்ற போர்வையில் தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறார்.
கள்ளச்சாராய கும்பலைத் தட்டிக்கேட்டதால் தோழர் நாவலன்
திமுக ரௌடிகளால் கொல்லப்பட்டார்.
திருவாரூர் தொகுதியில் இவர் கட்சிக்கார ரௌடிகள் செய்த அட்டூழியத்திற்கு
வேறு யார் நின்றிருந்தாலும் டெபொசிட் போயிருக்கும்.
மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்களாம் ..நாக்கூசாமல் சொல்லமுடிகிறது இவரால்..?
ஒன்றா ரெண்டா தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகள்..
கடல்மீன்கள் கரைக்குவந்தால் பிணம்
தமிழ்மீனவன் கடலுக்குப்போனால் பிணம் ...இதுதானே இன்றுவரை நடக்கிறது ?
"கிடக்கறதெல்லாம் கிடக்க கிழவனைத்தூக்கி மனையில வை " என்பது போல இவருக்கு பிறந்தநாள்கொண்டாட்டம் ஒரு கேடா ?


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...