Saturday, May 28, 2011

புதிய காமக்கதைகள் எழுதும் நக்கீரன்

ஜெயலலிதாவை கொல்ல சதியா..? என தலைப்பிட்டு இன்று நக்கீரன் வெளிவந்துள்ளது..நான் ஏற்கனவே சொல்லியபடி,தன் கோடிக்கணக்கான சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள நக்கீரன் தி.மு.க விசுவாசத்தை விட்டு அ.தி.மு.க பக்கம் தாவுவதற்கான முயற்சியில் இறங்கிவிட்டது...இனி அம்மா புராணம்,பெருமை நக்கீரனில் அதிகமாகும்...வேறு வழியில்லை..அசுர பலத்துடன் இருக்கும் அ.தி.மு.க வை கண்டு தி.மு.க வே பேதியாகி கிடக்கும்போது இவர்கள் எம்மாத்திரம்..?

நக்கீரனின் விழுந்துவிட்ட சர்க்குலேசனை தூக்கி நிறுத்த புதிய காமக்கதைகளை எழுத தொடங்கிவிட்டார்கள்..பொதுவாக இது குமுதம்,ஜூனியர்விகடனும் இந்த ஃபார்முலாவை கடைபிடித்திருக்கிறது என்றாலும் நக்கீரனில் இது எப்போதும் அதிகம்.

ரஞ்சிதா நித்யானந்தா வைத்து இவர்கள் வாராவாரம் எழுதிய சூடான காமக்கதைகள் அளவே இல்லை.பல கதைகளில்..சாமியார் காம லீலைகள் இதில் பிரசத்தம்,ஜெய்ஷங்கர் பெண்களை கற்பழித்துக்கொன்றது எப்படி..?,பாதிரியாரும் கன்னியாஸ்திரியும்நடத்திய லீலைகள்,நடிகையின் கதை,அந்தரங்கம்,குடும்ப பெண்களின் புதிய மன மாற்றம் என இவர்களே தொடங்கி வைக்கும் தொடர்களில் இவர்கள் கற்பனை மிக அதிகம்...

சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு வீடியோ தான் வந்தது..ஆனால் இவர்கள் அவர் பற்றி எழுதிய காமக்கதைகள் ரொம்ப அதிகம்..சாமியார் 9 இளம்பெண்களுடன் நிர்வாணமாக ஜலக்கிரீடை செய்வாராம்...ஆள் நடமாட்டம் இல்லாத அருவிப்பகுதிகளில் இது நடக்குமாம்..என தொடங்கும் காம ரசம் சொட்டும் இவர்களின் கற்பனை ஊற்றுக்கு பஞ்சமே இருக்காது.

இந்த இதழிலும்,அறுபதிலும் பெண்ணாசை என கோயில் அர்ச்சகர் பற்றிய காமக்கட்டுரைஒன்று உள்ளது..மனம் நடத்தும் விபரீதங்கள் பற்றி மனவியல் ஆய்வாளர் ஒருவர் விளக்குவார் என்ற போர்வையில் நடக்கும் கூத்துக்கு அளவே இல்லை..அம்புஜம் மாமி சின்னப்பையனோடு செய்த கூத்தை விளக்கி விட்டு,இந்த மாமி செய்தது சரியா என மனவியல் டாக்டரிடம் ரெண்டு வார்த்தை கேட்டு கட்டுரை வெளியிடுவார்கள்..இது சமூக நலனாம்.

அந்த கட்டுரைக்கு விளம்பரமாக பெரிய பெரிய கலர் போஸ்டர் அரை குறை ஆடையுடன் ஆண் பெண் தழுவிக்கொள்ளும் படி நடைபாதையெங்கும் ஒட்டப்பட்டிருக்கும்..பஸ் ஸ்டாப் செக்ஸ் பெட போஸ்டர் ரேஞ்சுக்கு நாறி கிடக்கும்...மாணவ மாணவிகள் இதை பார்க்காமல் கடக்கவே முடியாது...

இதை பார்த்துட்டு எத்தனை பயலுக..பக்கத்து வீட்டு மாமி மேல பாய்ஞ்சானுகளோ..!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...